Jump to ratings and reviews
Rate this book

வீரபாண்டியன் மனைவி(பால காண்டம் ) - பாகம் 3

Rate this book
இக்கதை சென்ற காலத்தை சித்தரித்து காட்டுவதோடு , நிகழ்காலத்திற்கு எதிர்காலத்திற்கும் தேவையான ஒரு மாபெரும் இலக்கியத்தை நினைவுறுத்தும்.

835 pages, Paperback

First published January 1, 1957

1 person is currently reading
26 people want to read

About the author

Aru Ramanathan

32 books10 followers
அரு. ராமநாதன் தமிழக எழுத்தாளர், தொகுப்பாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் மற்றும் திரைவசன கர்த்தா ஆவார். ரதிப்பிரியா, கு. ந. ராமையா ஆகிய பெயர்களிலும் எழுதினார்.

வாழ்க்கைச் சுருக்கம்
அரு.ராமநாதன் சிவகங்கை மாவட்டம், கண்டனூரில் 1924 ஆம் ஆண்டில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார். இவரது முதல் படைப்பு இவரது 18 வயதில் எழுதப்பட்ட சம்சார சாகரம். 1000ம் முறை மேடையேறிய "ராஜராஜ சோழன்" என்கிற நாடகத்தை 1945ம் ஆண்டு டி.கே.எஸ். சகோதர்கள் நடத்திய போட்டிக்கு அனுப்பினார். இது முதல்பரிசு பெற்றது. பின்னர் திரைப்படமாகவும் வந்தது. பெரும் விவாதத்தை எழுப்பிய "காதல்" என்கிற இதழை 1947இல் உருவாக்கி பிரசுரித்தார். இவர் எழுதிய முதல் சிறுகதை ‘கோழிப் பந்தயம்’ .தொடர்ந்து அம்பிகாபதி, பழையனூர் நீலி, நாயனம் சவுந்திர வடிவு, மனோரஞ்சிதம் என்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய முதல் புதினம் ‘அசோகன் காதலி’. இவரது உன்னதமான படைப்பாக கருதப்படும் "வீரபாண்டியன் மனைவி" பத்திரிக்கையில் ஏழு ஆண்டுகளாக தொடராக வந்தது. மூன்று பாகங்களில் பின்னர் நூலாக வெளிவந்தது.

இவர் எழுதிய நாடகங்கள்: 'வெற்றி வேல் வீரத்தேவன்’, ‘வானவில்‘. ராஜராஜ சோழன் திரைப்படம் உட்பட ‘பூலோக ரம்பை’, ‘ஆரவல்லி’ ஆகிய படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.

அரு.ராமநாதன் 1974-இல் மறைந்தார்.

படைப்புகள்
அசோகன் காதலி
வீரபாண்டியன் மனைவி
அறுபது மூவர் கதைகள்
குண்டு மல்லிகை
போதிசத்துவர் கதைகள்
மதன காமராஜன் கதைகள்
ராஜராஜ சோழன்
விநாயகர் புராணம்
காலத்தால் அழியாத காதல்
விக்கிரமாதித்தன் கதைகள்
கிளியோபாட்ரா
சுந்தரரின் பக்தியும் காதலும்
வெற்றிவேல் வீரத்தேவன்
வேதாளம் சொன்ன கதைகள்
பழையனூர் நீலி

மொழிபெயர்த்தவை
சிந்தனையாளர் பெஞ்சமின் பிராங்க்ளின் - மார்கரெட் கசின்ஸ்

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (75%)
4 stars
1 (25%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Shyam Sundar.
112 reviews39 followers
December 24, 2016
பாண்டியர்களை சூழ்ச்சிகரமாக தாக்கி பாண்டியர்களின் தலைநகரான மதுரையை ஆக்ரமித்துக்கொள்கிறார்கள் சோழர்கள் .

வீரபாண்டியனும் பாண்டிமாதேவியும் தலை மறைவாகிறார்கள் .

அவர்களை பிடிப்பதற்கு வீரசேகரனும் ஜனநாதனும் முயற்சிக்கிறார்கள் . அதே சமயம் ஈழவராயனும் ஊர்மிளாவும் பாண்டியனை தப்புவிக்க முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் .

பாண்டிமாதேவியை வீரசேகரன் ஜனநாதனின் உதவியுடன் சூழ்ச்சிகரமாக சிறை பிடிக்கிறார்கள் .

பின்னர் 700 பக்கங்களுக்கு மேல் பாண்டிமாதேவியை சிறை மீட்க பாண்டியனும் காத்தவராயனும் முயற்சிக்கிறார்கள் .

கதை சுவாரசியமாக நகர்கிறது . 126 அத்தியாயங்களும் "ம" வில் தொடங்குவது ஆச்சரியம் . ஜனநாதனின் பாத்திரத்தை தவிர வேறு எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்க மறுக்கிறது. அரசியல் சூழ்ச்சியை பற்றிய வரலாற்று புதினம் என்பதால் மிக சுவாரசியமாக நகர்கிறது . ஒரே வரியை / வாக்கியத்தை பலமுறை உபயோகப்படுத்துவது லேசாக சலிப்பு தட்டுகிறது . சாண்டில்யன் கதைகளுக்கு இணையான விறுவிறுப்போடு செல்கிறது . A must read.
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.