Jump to ratings and reviews
Rate this book

கெடை காடு

Rate this book
கெடைகாடு

காடு கோடானு கோடி புதிர்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவிக் கிடக்கும்

முப்பாட்டன்களின் மூச்சுக் காற்றில் நமக்கு பல கதைகள் கிடைக்கின்றன. இயற்கை நம்மோடு பேசவும் நாம் இயற்கையோடு பேசவும்

காடு கட்டிவைத்திருக்கிறது பெரும் பள்ளிக்கூடம். இங்கு கற்கவும் சுற்றவும் ஏழாயிரம் வாசல்கள். புற்களால் நிரப்பப்பட்டிருக்கும் அம்மண்

தரையெங்கும் எவனோ ஒருவன் சென்றுவந்த ஒற்றையடிப் பாதை இன்னும் ஆச்சரியம்.



” ஓநாய் குலச்சின்னம் நாவலை வாசிக்கும் போது மங்கோலிய வேட்டை நிலத்தை இவ்வளவு நுட்பமாக எழுதிப்போகிறாரே என வியந்தேன்.

அந்த விவரணைகளுக்கு இணையாக கிடைமாடுகளின் வாழ்க்கையை அதன் தனித்துவமான அனுபவங்களைத் தனது இயல்பான மொழியில், நுட்பமான கதை சொல்லலில் விவரிக்கிறார் ஏக்நாத்”.

200 pages, Paperback

Published October 1, 2014

4 people are currently reading
29 people want to read

About the author

ஏக்நாத்

8 books1 follower
ஏக்நாத் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர், பாடலாசிரியர், நாவலாசிரியர். இளம் வயதிலேயே எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், கவிதை, சிறுகதைகளை எழுதி வந்தார். சென்னையில் பத்திரிகையாளராக பணியாற்றி வரும் இவர், திரைப்படங்களிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (15%)
4 stars
5 (38%)
3 stars
6 (46%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Premanand Velu.
243 reviews39 followers
April 24, 2019
மரபு சார்ந்த சமூக அமைப்புகள் அருகி வரும் காலத்தில், அந்த சமூகத்தின் வாழ்வும், அமைப்பும் ஆவணப்படுத்துதல் அவசியம். அப்படி பதிவு செய்த அந்த மரபுகளின் இருப்பை வெகுசன இலக்கியத்தின் வழியாக காட்சிப்படுத்துதல் அதனினும் மிக மிக அவசியம். மாறி வரும் இக்காலத்தில் இடையர் வாழ்வு என்பது வெறும் தொழில் சார்ந்த, விவசாயத்தின் துணை தொழிலாகவோ அல்லது நகரவாழ்வின் விளிம்பு நிலையாகவோ மட்டுமே இதுவரை காட்சிப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
அதை மீறி, ஒரு கால்நடை வளர்ப்பு சார்ந்த, சாதிகளுடன், சாதிகளின் தாக்கம் இன்றி வாழ்ந்திருக்கும் ஒரு சமூகம் ஒரு ஆச்சரியம்; அதை இடையர் என்று கூறுவது அதை ஒரு வட்டத்துக்குள் மரபாக அடைத்துவிடக்கூடிய ஆபத்துள்ளது. மாடு வளர்ப்பில் வாழ்வியல் பிணைந்திருக்கும் ஒரு சமூகம், அதன் வாழ்வோட்டத்தை பின்னி படர்ந்திருக்கும் படைப்பு இது.
ஆரம்பத்தில், அந்த சமூகத்தின் ஒரு விடலை வாலிபனின் (உச்சிமாகாளி)வழியே நகரும் கதை, அந்த ஒட்டு மொத்த சமூகத்தின் மனிதர்களை, அவர்களின் வாழ்வை, அவர்களுக்குள் இருக்கும் உறவுகளை, அதன் சிக்கல்களை, தொடர் கண்ணியாக, உச்சிமாகாளியின் பார்வை மற்றும் அனுபவத்தின் வழியே விரியும் போது ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு கிடையில் இருக்கும் பசு, கன்று, சண்டிக்காளை போன்றே அவர்கள் சமூகமத்தின் கூறுகளும் விரிவது சுவாரசியம். உச்சமாக குள்ராட்டியில் விரியும் கதைக்களம், அந்த சமுகம் எப்படி அவர்களின் கிடையை சரி செய்வது போலவே சரி செய்துகொள்கிறது என்பதை ஒரு நுட்பமான இழையாய் அழுத்தமாக பதியச்செய்வது விரிந்து வியக்கவைக்கிறது.
Profile Image for Rajanna.
15 reviews4 followers
October 10, 2019
Beautifully written novel about the village life around the western ghats in Tirunelveli circa.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.