பிரபு காளிதாஸின் முதல் நாவல் என்கிற வகையில் மிக நல்ல தொடக்கம். எழுத்தில் நல்ல முதிர்ச்சி. காட்சிப்படுத்துவதில் ஆழம். இதெல்லாம் ப்ளஸ். ஆனால் க்ராஃப்ட் மட்டுமே போதாது. அடுத்த நாவலில் இதைத் தாண்டுவார் என நம்புகிறேன். இளையராஜாவின் பாடல்களின் வரிசைகள் பழைய உத்தி, குறைத்திருக்கலாம். அப்பள கணேசனின் அம்மா ஒரு வரியிலாவது வந்தது நல்ல பெண்களும் இருக்கிறார்கள், அப்பாடா என்று நினைக்க வந்தது. பல கண்ணிகள் முழுமையடைய வில்லை. விரிவான நாவலாக வந்திருக்கவேண்டும். நாவலில் பிரதானம் பொறுமையே. அது நடையில் கைவசப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த நாவலிலும் அது முகிழவேண்டும். பிரபு காளிதாஸுக்கு வாழ்த்துகள்.
வாழ்க்கைல ஒருத்தர் என்னமாதிரி மாற்றத்துக்கு உள்ளாகுறாங்கன்றத தீர்மானிக்கிறது அவங்களோட இளமைக்காலம் தான். குடும்பத்துல என்ன மாதிரியான சூழல்ல வளர்ராங்க, வெளில யார்கூட பழகுறாங்க, சுத்தி இருக்குற இடங்கள்ல என்ன நடக்குது, தனிப்பட்ட முறைல ஒருத்தரோட குணாதிசயம் என்ன, இதெல்லாம் சேந்தது தான் ஒரு மனுஷன். அப்டியே டமால்னு ஆகாயத்துலேர்ந்து குதிச்சு ஒருத்தன் நல்லவனாவோ கெட்டவனாவோ மாறிடுறதில்ல.அது ஒரு நீளமான ப்ராசஸ்.பல சம்பவங்களோட தொகுப்பு. இந்த ப்ராசஸ் அவங்க ஆசப்பட்டதுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத அல்லது அவங்களோட குணாதிசயத்துக்கு கொஞ்சமும் ஒத்துப் போகாத ஒரு வாழ்க்கைமுறைல கொண்டுபோய் தள்ளும். சில சமயங்கள்ல அவங்க வாழாமலே கூட போறதுண்டு. ரவுடியாகவோ, வன்முறையாளனாகவோ, இருக்கிற ஒருத்தனோட கடந்த காலத்தைப் பாத்தீங்கன்னா நிச்சயம் இந்த மாதிரி ஒரு கதை இருக்கும். Form ஆகுறதுன்னு சொல்வாங்கள்ல, அந்த மாதிரி.
தஞ்சாவூரைக் களமாகக் கொண்ட நாவல்னு கேள்விப்பட்டவுடனே ரொம்ப ஆவலா காத்திருந்தேன். நான் தஞ்சாவூர்க்காரனில்ல. பெரிய கோவில், சோழர்களின் தலைநகரம், காவிரியோட கடைமடைத் தண்ணி, இசைப் பாரம்பரியம், இப்படியா எங்க ஊருக்கும் தஞ்சாவூருக்கும் ஏகப்பட்ட ஒத்துமைகள் இருக்கு.அந்த தஞ்சாவூர்ல இருக்குற சுந்தர், கதிரவன். இந்த ரெண்டு பசங்களோட வாழ்க்கைல நடக்குற சம்பவங்களோட தொகுப்பு தான் ‘நீருக்கடியில் சில குரல்கள்’.
The story flows through the people's life in its best pace. Brilliant writing in terms of reflecting the landscape and the period in which the story moves on ! Few sequences are constructed surprisingly amazing. I had a feeling of watching them along with the characters. Every personality and sketch is easily relatable with the people we come cross in our life.
சிறந்த பொழுதுபோக்கு நாவல். இதில் வரும் சுந்தரின் வாழ்க்கை, கண்டிப்பாக நம் வகுப்பில் படித்த ஒரு நண்பனின் வாழ்க்கையே.. பிரபு காளிதாஸ் அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.. வாழ்த்துக்கள்...