Raghavan was born in Adyar, Chennai and spent his early years in many villages of Chengalpet District because of the frequent transfers of his father in his job. In the mid-1980s, his family shifted and settled in Chennai where Raghavanfinished his school and college studies in 1988. Even though he has completed a course in Mechanical Engineering, he did not want to take a job in a factory because of the interest in writing. Raghavan started his career as a sub-editor in Amudhasurabi Monthly Magazine. The famous weekly magazine kalki offered him the post Assistant Editor in 1992 after he showed his talent in humorous articles and stories.
Raghavan worked as an assistant editor in Kalki for about 8 years and joined in kumudam the No.1. Tamil weekly magazine in 2000. After completing a full year in Kumudam as Assistant Editor, he was appointed as the Editor in Charge for then newly started by monthly Kumudam Junction.
Raghavan left the magazine industry and became involved in publishing in 2003 and presently leading the Tamil Division (‘'Kizhakku Pathippagam'’) of New Horizon Media Private Limited.
"சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு: A HISTORY OF ARAB SPRING (TAMIL EDITION)" - பா ராகவன்
2012 வாக்கில் எழுதப்பட்ட புத்தகம்.
2010-11ன் போது ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில், 30, 40 ஆண்டுகளுக்கு மேலாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக, மக்களின் தன்னெழுச்சியான புரட்சிகள், கலவரங்கள், அதை தொடர்ந்து நடைபெற்ற ஜனநாயகத்திற்கான மாற்றங்கள் என வரலாற்றை திரும்பி பார்க்கும்விதமாக இப்புத்தகம் இயற்றப்பட்டுள்ளது.
துனிஷியா, அல்ஜீரியா, லிபியா, ஜோர்டான், சூடான், ஓமான், ஏமன், சவூதி , எகிப்து, சிரியா, ஜபவுதி, மொரோக்கோ, ஈராக், சோமாலியா, பஹ்ரைன், ஈரான், குவைத் போன்ற நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளுக்கு காரணம், தங்கு தடையற்ற ஊழல், கனிம வளக் கொள்ளை, வேலைவாய்ப்பின்மை, இருக்கும் வேலைவாய்ப்புகளை இந்தியா போன்ற தேசங்களிருந்து வரும், கொடி பிடித்து எதிர்க்காத வேலையாட்களுக்கு அளிப்பது, வறுமை, சாதி-மத பிரச்சனைகள் போன்ற பல.
இதனால், கொந்தளித்த அந்நாட்டு மக்களின் புரட்சி, மேற்கண்ட நாடுகளில் சிலவற்றுள் பரவாமல் தடுக்க, அந்தந்த நாட்டின் அதிபர்களும் அரசர்களும் வரிந்து கட்டிக்கொண்டு மக்கள் நல திட்டங்களை மானாவாரியாக அறிவித்ததையும் விவரிக்கிறது இந்நூல்.
துனிஷியாவில் ஜைனுல் ஆபிதின் பென் அலி. எகிப்தில் ஹோஸ்னி முபாரக் ஜோர்டன் மன்னர் அப்துல்லா லிபிய அதிபர் கடாஃபி ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் இராக் பிரதமர் நூரி அல் மாலிக் இரான் அயாதுல்லா கொமேனி அல்ஜீரிய அதிபர் போதேஃப்லிகா (Bouteflika) போன்ற ஆட்சியாளர்களை ஓடவிட்டும், அடக்கியும் வைத்தது அந்தந்த நாடு மக்களின் புரட்சி போராட்டம்.
இந்த நாடுகளின் புரட்சிகள் பற்றி மட்டுமல்லாமல் அதற்கு வரலாற்றில் மறைமுக காரணமான கிரேக்க, ரோம, ஒட்டாமன் பேரரசுகளும், மங்கோலிய, ஜார், யூத அரசர்களும் பற்றியும் விவரிக்கிப்படுகிறது
மேலும் அரபு தேச போர்களை டாலரின் மதிப்பை கூட்டுவதற்கு பயன்படுத்துவது, பெட்ரோலியத்திற்கு மாற்றை கண்டுபிடிப்பது போன்ற உலக அரசியல் மற்றும் அறிவியல் பற்றியும் விவரித்து கூறப்பட்டுள்ளது. எண்ணெய் தேசங்களில் இப்படியான புரட்சிகளால், ஐரோப்பிய, அமெரிக்க தேசங்கள் பெற்ற, பெறப்போகும் லாப நட்ட அரசியலும் அலசப்பட்டுள்ளது.
இதுபோன்ற புரட்சிக்கு மூலகாரணமாக இணையம் பெரும் பங்கு வகித்துள்ளதாக திரு பா.ரா குறிப்பிடுகிறார். சமூக வலைத்தளங்களின் மூலம், புரட்சிகள் தொடங்கி, அது வீதிக்கு இறங்கி போராட செய்யுமளவிற்கு தகவல் பரிமாற்றத்திற்கு உதவியுள்ளது Wordpress, Facebook, Twitter போன்ற வலைதளங்கள்.
அரச அடக்குமுறையின் மூலம், பத்திரிக்கை ஊடகங்களின் குரல்வளை நசுக்கப்படும்போது, SmartPhone வைத்திருக்கும் ஒவ்வொருவரும் இனி பத்திரிகையாளர்கள்தாம் என்கிற திரு பா.ரா'வின் கணிப்பிறகு, நிகழ்கால சூழல் சாட்சியமளிக்கிறது.
மொத்தத்தில், 10-12 வருடத்திற்கு முந்தைய உலக நடப்பையும், அரசியல் புரட்சிகளையும் விரிவான முறையிலும் துள்ளல் நடையிலும் தெரிந்து கொள்ள ஏற்ற புத்தகம் இது.
A book published in haste to take advantage of the information-hungry youngsters. Though Raghavan's style is good, the fact that the book has been published even before some substantial changes have taken root post-Jasmine revolution in the Middle East clearly underlines the business-minded strategy of Kizhakku's Badri to convert anything into money.