குண்டு செலுத்தப்பட்ட துப்பாக்கி , சுடப்பட்டவரை நோக்கி எந்த யோசைனையும் இன்றி சுடுவது போல , காலம்காலமாக போராட்ட குழுக்கள் , தங்கள் ஆணைகளை நிறைவேற்ற , எந்த கேள்வியும் கேட்காத , போராளிகளை தயார் செய்கின்றனர். இதில் வரும் சாந்தன் ஒரு துப்பாக்கி தான் , அவனுள்ளும் ஒரு குண்டு உள்ளது . ஒரு போரில் அவன் குண்டடிப்பட்டு அந்த குண்டானது இன்றும் அவனுள் இருப்பது, ஒரு உருவகமாக சொல்லப்பட்டு இருந்தாலும் , அவன் நிஜத்தில் , எந்த கேள்வியும் கேக்காத , திரும்பி பேசாது , சுட வேண்டிய ஒரு துப்பாக்கி தான் . தன் ஆணையை நிறைவேற்ற இலங்கையில் இருந்து வந்து , இங்கு அகதியாய் குடியேறி , இங்குள்ள ரா அமைப்பின் ஒரு எதிர் குழுவில் சேர்ந்து , அவன் சேர வேண்டிய இடத்தில் சேர்கிறான்.
இந்தியா-பாகிஸ்தான் போரில் இலங்கை , பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கள் எரிபொருள் நிரப்ப இடம் கொடுத்தததற்காக , இந்தியா அரசு விடுதலை புலிகளை பயன்படுத்தி , அவர்களை வலிமையாக்கி , இலங்கையில் உள்நாட்டு போர் மூலம் , அரசின் ஸ்திர தன்மையை குலைக்க முயற்சிக்கிறது . இது அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தியாதலின் , ராவின் பங்கு இதில் புரிந்து கொள்ள முடிகின்றது , மற்றபடி இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என தெரிகிறது , இருப்பினும் இதில் உள்ள முக்கிய பாத்திரங்களை நிஜத்தில் யாராக இருக்கும் என கண்டுபிடிக்க முடியவில்லை. இலங்கை முக்கிய பிரமுகர் இங்கு கொல்லப்பட்டது போன்ற தகவலும் திரட்ட முடிவில்லை.