5 கதைகளை உள்ளடக்கிய ஒரு நாவல். ஷிஞ்சி தாஜிமாவின் ஜப்பானிய கதைகளை தமிழில் வெங்கட் சாமிநாதன் மொழியாக்கம் செய்துள்ளார். குழந்தை இலக்கியமாக பொதுதளத்தில் தெரிந்தாலும், பெரியவர்களுக்குமான பாடங்கள் சேர்ந்தே இருக்கின்றன.
குறிப்பாக ஆச்சர்யம் எனும் கிரகத்தின் கதை, கோன் ஈச்சி வீடுமலை, வசந்தம் வருவது எப்போது போன்ற கதைகள் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளன.. நம்பிக்கையின் மீதான நம்பிக்கை இன்மையை போக்கும் விதமான சிந்தனைகள் உள்ளன...
இதில் உள்ள 5 கதைகளும் மிகவும் அருமையாக உள்ளன. எதிர்காலத்தின் மீது நாம் வைக்க வேண்டிய நம்பிக்கையைப் பற்றி பேசுகிறது. பேராசையால் வரும் பேராபத்தைப் பற்றி பேசுகிறது.