டாக்டர் குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரம் ஒரு சிறைப்படைப்பு. அதை எடுத்த எடுப்பிலேயே புரிந்து கொள்வது எளிதல்ல. அதை நன்கு முற்றிலுமாக தெரிந்து பாராட்ட இரண்டு அல்லது மூன்று முறை கவனமாகப் படிக்க வேண்டும். அதன் மூலப் பிரதியைக் கண்டவுடன் நான் அதிலென்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். முதல் பகுதியிலேயே என் ஆர்வத்தை நிறைவு செய்ததுடன் என்னை சிறிதும் களைப்படைய செய்யாமல் மாறாக நல்ல பயன் தந்து இறுதிவரை இட்டுச் சென்றது. எம்.கே.காந்தி
ஊரக மேம்பாட்டின் குறியீடு என்பது, சாலைகள் அமைப்பதோ கிணறுகள் தோண்டுவதோ வேதியுரங்கள் வழங்குவதோ அல்ல, திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பு சில ஏழை உழவர்களை அழைத்து அவர்களது விலா எலும்புகளை எண்ண வேண்டும், திட்டங்களை செயல்படுத்திய பின்னர் அவர்களை மீண்டும் அழைத்து அவர்களது விலா எலும்புகளை மூடும் படியான சதை வளர்ந்து இருக்குமேயானால் அதுதான் திட்டத்தின் உண்மையான வெற்றி
தற்சார்பு பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தையும் கிராமங்கள் இதனை கையில் எடுத்ததால் அவற்றில் ஏற்பட்ட வளர்ச்சியினையும் கூறி ஒரு நாடே இதனை கையில் எடுக்குமானால் அது எவ்வளவு நன்மையை உண்டாக்கும் என்று இந்நூல் பேசுகிறது. இயற்கைக்கு தீங்கிலா நிலைத்த பொருளாதாரமாக இருப்பினும் பல நடைமுறை சிக்கல்களும் இதில் இருப்பதாக எனக்குப்படுகிறது. மேலும் வருணாசிரமத்தை நிலைத்த பொருளாதரத்திற்கு எடுத்துக்காட்டாக கூறும் இடத்தில் நான் முரண்படுகிறேன்.