Jump to ratings and reviews
Rate this book

வெண்முரசு #13

வெண்முரசு – 13 – நூல் பதின்மூன்று – மாமலர்

Rate this book
பாண்டவர்களின் வனவாசத்தில் பீமனுக்கான கதையை எழுதத் தொடங்கியபோது பீமனின் உச்சம் என்பது கல்யாணசௌகந்திக மலரைக் கொண்டுவருவதே என்று தெரிந்தது. பிறர் தத்துவம் வழியாக தவம் வழியாகச் செல்லும் இடங்களுக்கு பெருங்காதல் வழியாகவே சென்றவன். மெய்மையின் முகங்களை அவன் காதலின்பொருட்டு நிராகரிக்கும் ஓர் இடம் இந்நாவலில் வருகிறது. எதையும் தத்துவார்த்தமாக ஆக்காமல் எங்கும் பின் திரும்பி நோக்காமல் சென்றுகொண்டே இருப்பது அவன் ஆளுமை. மாமலர் பீமனுக்குச் சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவன் காதலன். காதலனே பெண்ணை அணுகி அறியமுடியும். அன்னையரையும் அவனால்தான் அறியமுடியும். இது அவனுடைய மூதன்னையரின் கதைகளும்கூட.

1408 pages, Unknown Binding

Published February 1, 2017

2 people are currently reading
65 people want to read

About the author

Jeyamohan

209 books844 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
32 (68%)
4 stars
12 (25%)
3 stars
3 (6%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for இரா  ஏழுமலை .
136 reviews8 followers
August 21, 2024
இளா
பூருவரஸ்
ஆயுஷன்
நகுலன்
யயாதி
யது
புரு வம்ச வரலாறு மற்றும் பீமன் கல்யாண சௌகந்திகத்திகம் மலரை தேடிய பயணம் ஆகியவை அடங்கிய நாவல்... இறப்பிலிருந்து உயிர்பிக்க செய்யும் நூல்செல்லை அடைவதற்காக தேவர்கள் கசனை அசுரர்கள் இடம் அனுப்புகிறார்கள் கசன் தேவயானியை ஏமாற்றுகிறான். பிறகு யயாதியை திருமணம் செய்கிறாள் அவனும் சர்மிஷ்டை உடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு ஏமாற்றுகிறான். ( தேவையானி இதை கண்டு பிடிக்கும் இடம் செமய இருக்கும்) பெரிய தவசீலர் சுக்ரர் இதற்கு மகளே தேவயானி கசன் உன்னை ஏமாற்றியதற்காக அவன் மீது நீ தீச்சொல்லிட்டாய் அல்லவா அதற்கான விளைவு தான் இப்போது யயாதி உன்னை ஏமாற்றியதும் , ஒரு முடிச்சு பிரிது ஒரு முடிச்சை தான் உருவாக்கும் என்று தீர்ப்பு வழங்குகிறார். பிறகு யயாதிக்கு அவர் கொடுக்கும் தண்டனை நீ முதுமை அடைவாய் ஆனால் உன் முதுமையை ஏற்றுக் கொள்ளும் யாரோ ஒருவருக்கு உன் முதுமையை அளித்து நீ காமத்தில் திலை பிறகு உனக்கு காமம் சலிக்கும் போது நீ முதுமை அடைவாய் என்று ஒரு அற்புதமான தண்டயை வழங்குகிறார்... என்னங்கடா இது கேட்ட நன்மை பயக்கும் தீசொல் தான் மாமுனிவர் வழங்குவாராம்...
17 reviews1 follower
Read
January 10, 2019
The journey of Bheema to get kalyasountharika flower to Dhroupathi. The story of Devayani, Sukrar, Kasan Yayathi also told
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.