கிள்ளிக்காட்டு மனையைச் சேர்ந்த சங்கரநாராயண நம்பூதிரியின் மகள் ஸ்ரீதேவி. அவளின் திருமணம் மூன்றாவது முறையாகத் தடைபடுகிறது. திருமணத்துக்கு முன்பே மூன்று மருமகன்களும் துர்நிமித்தங்கள் மூலம் மரணம் அடைந்தனர். இந்நிலையில் கிருஷ்ணன் அங்கு வருகிறான். கிள்ளிக்காட்டு மனையில் நடந்தது என்ன? இதில் மந்தாகினி, விஷ்ணு என்பவர்கள் யார்? ருத்ரன் பட்டத்திரி மற்றும் நீலகண்டனின் திட்டம் நிறைவேறியதா? இறுதியில் ஸ்ரீதேவியை மணந்தது யார்? வாசித்து அறிந்துகொள்வோம் சுவாரஸ்யமான மந்திர முழக்கத்தில்...