சாதியைவிட மனிதம் பெரிது, தனி மனித சுதந்திரம் பெரிது என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம் என்று மன வேதனையோடு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் எவிடன்ஸ் கதிர்.
இந்த நூல் சமூக நீதிக்காகவும், மனித உரிமைக்காகவும் போராடும் அனைவருக்கும் ஒரு கையேடாக விளங்கும் என்று கருதுகிறேன். சாதிப் பிரச்சனை என்றும் பாலினப் பிரச்சனை என்றும் எளிதாக எதையும் புறந்தள்ளிவிடக்கூடாது. அவை எதிர்கால சமுதாய நலனுக்கு தடையாக இருக்கும் என்பதையும், அவை தகர்க்கப்படவேண்டும் என்பதையும் இந்த நூல் அறிவுறுத்துகிறது. - இரா. நல்லகண்ணு.
சாதி தேசத்தின் சாம்பல் பறவை எவிடென்ஸ் கதிர் கதிர் எவிடென்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் அந்த அமைப்பு பட்டியல் இனத்தவரின் உரிமைக்காக போராடிய அனுபவத்தை நம்முள் இந்த புத்தகத்தின் மூலம் கடத்துகிறார். சாதி எல்லாஇடத்திலும் உள்ளது கோயில் ,பள்ளிக்கூடம் ,தேனீர் கடை ,அரசமைப்பு ,சுடுகாடு ஏன் மருத்துவமனையிலும் கூட சாதி பார்க்கப்படுகிறது என்று தன் கள ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் கதிர் தலித் மக்கள் எப்படி சுரண்ட படுகிறார்கள் அவர்கள் எப்படி மனிதத்தன்மையற்ற கொடுமைகளை அனுபவிக்கிறார்கள் என்று விவரிக்கும் பொழுது நாம் இப்படிப்பட்ட ஈவு இரக்கம் இல்லாத சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை நம் முன் வைக்கிறார். என் இட ஒதிக்கீடு சலுகை அல்ல அது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உரிமை என்பதையும் விளக்குகிறார் நம் மக்களின் உரிமை பெற நம் நாட்டின் சட்டம் தான் வழி அதை பயன்படுத்தினால் தான் நம் மக்களுக்கு விடுதலை என்கிறார் கதிர் .
சாதி எப்படியெல்லாம் நம் சமூகத்தில் ஊடுருவி உள்ளது அது எப்படி நம் மக்களை நொறுக்குகிறது என்பதை புரிந்து கொள்ள இந்த புத்தகத்தை படிக்கலாம் .
A grim reminder of the harsh realities of caste based discrimination in Rural and small town Tamil Nadu. The author is an activist who has been fighting for Dalit rights for decades now.
The statement by Kousalya (whose husband Sankar was killed by her family in public in a rabid act of "honour!" killing) is a deeply painful one. The author gets simplistic when it comes to issues other than caste but otherwise ,the book is a must read for throwing light on the darker pages of our society.
சாதி எனும் கீழ்த்தனத்தினால் தான் பெரும்பாலான மக்கள் மனிதத்தன்மை இல்லாமல் வாழ்கிறார்கள். -அண்ணல் அம்பேத்கர். கடந்த ஆண்டின் இறுதியில் புதுக்கோட்டை வேங்கை வயல் பகுதியில் தலித் மக்கள் பெரும்பாலும் வாழக்கூடிய இடத்தில் அமைந்த குடிநீர் சேகரிப்பு தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பெரும் அதிர்வலைகள் கிளப்பியது. இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் அந்த துறை சார்ந்த அமைச்சர் குறைந்தபட்ச ஆதரவான ஒரு ஆறுதலும் தெரிவிக்கவில்லை.எங்கே சென்றாலும் சமூக நீதியே தங்கள் கொள்கையாக கொண்ட ஆளும் கட்சியும் இந்த விடயத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த செயல் என் மனதை மிகவும் பாதித்தது. அதன் விளைவால் வாசித்ததே இப்புத்தகம். கடந்த 25 ஆண்டுகளாக மனித உரிமைகள் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் எவிடன்ஸ் அமைப்பில் நிறுவனரான எவிடன்ஸ் கதிர் எழுதி உள்ள 29 கட்டுரைகள் அடங்கியது.தான் சந்தித்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற வரை உதவி அளித்துள்ளார். மேலும் தீண்டாமை, ஆணவக் கொலைகள், சாதி கலவரம்,பெண் வன்கொடுமை,குழந்தை தொழிலாளர்கள் பற்றி சர்வதேச அளவில் கவனத்துக்கு கொண்டு சென்று ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்நூலை வாசிக்கும் போது நம்மை அறியாமலேயே மனதில் ஒரு தாக்கம் உண்டாக்கும் வகையில் அவரின் எழுத்துக்கள் உள்ளன.
Hard hitting reality. Make you realize the society you live in and get a gasp of things around you. Will you be able to lead a life like this bird, naah... but atleast open your eye to get a view. The view which is masked. Kathir will help you realize it.