வால்மீகி போன்ற மகத்தான கவிகளை வாசிப்பது, உணர்வது, தெளிவது மானுடப்பண்பை உயர்த்தும். கலை , கலாச்சாரம், பண்பாடு என்பதெல்லாம் மனித விழுமியங்கள். மனிதகுலம் சிறந்தோங்க நம் மூதாதையர் படைப்புகளை ஆராய்ச்சியோடு இன்று நம்மை நாம் செழுமை செய்துகொள்வோமாக. வியாசரின் பாரதம் எனக்குப் பிடித்த மாபெரும் இந்திய இலக்கியப்படைப்பு எனில், இராமாயனம் மாபெரும் இந்திய இதிகாசங்களில் ஒன்று. -பிரபஞ்சன்
Prapanchan (Tamil: பிரபஞ்சன்), is the pseudonym of S. Vaidyalingam (Tamil: சாரங்கபாணி வைத்தியலிங்கம்) a Tamil, writer and critic from Puducherry, India.
He started his career as a Tamil teacher in Thanjavur. He also worked as a journalist in Kumudam, Ananda Vikatan and Kungumam. In 1961, he published his first short story Enna ulagamada in the magazine Bharani. He was influenced by the Self-Respect Movement. He had published 46 books. In 1995, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his historical novel Vaanam Vasappadum (lit. The Sky will be ours) set in the times of Ananda Ranga Pillai. His works have been translated into Hindi, Telugu, Kannada, German, French, English and Swedish. His play Muttai is part of the curriculum in Delhi University and his short story collection Netrru Manidhargal is a textbook in many colleges.
இந்திய தேசத்தின் மாபெரும் இலக்கிய / புராண அடையாளங்களில் ராமாயணமும் ஒன்று. பிரபஞ்சனின் ராமாயணம் - கம்பர், துளசிதாசர் மற்றும் வால்மீகியின் படைப்புகளினூடே சென்று அவர்களின் பார்வைகளை ஒப்பிட்டு அதில் உள்ள வேறுபாடுகளை விவரித்து, கதாபாத்திரங்களின் மனநிலை, செயல்பாடுகள் ஆகியவற்றை ஆராய்ந்து விமர்சிக்கிறது. பல பரிமாணங்களில் கதையைப் புரிந்துகொள்ள உதவும் நூல்.
புராணங்கள் அனைத்தும் கலை, கலாச்சாரம், பண்பாடு போன்ற மனித விழுமியங்களின் பிரதிபலிப்பே. நாட்டார் பாடல்களின் மூலாதாரத்தை கொண்டே வால்மீகி ராமாயணத்தை படைத்திருக்கக்கூடும் என்று பிரபஞ்சன் கூறுகிறார்.
கண்மூடித்தனமான மதம், கடவுள் கோட்பாடு போன்ற போர்வையில் இதிகாசங்களை அணுகாமல் படித்தால் மட்டுமே அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை பார்க்க முடியும். நாத்திக / தர்க்க ரீதியில் விமர்சனம் அவசியம் தான். ஆனால் அது மட்டுமே சரியான அணுகுமுறை ஆகாது. முரண்பாடுகள் இருப்பினும் ராமாயணம் படிப்பதற்கான காரணங்கள் பல உண்டு. அதில் நான் காண்பது உளவியல். ஒழுக்கம், குடும்ப அமைப்பு, சகோதரத்துவம், காமம், கற்பு நெறி, அகம்பாவம் ஆகிய அனைத்தும் தனிப்பட்ட மனிதனுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்களாகவே கதைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
தீவிர ஹிந்துத்துவ கொள்கையாளர்கள் & நாத்திக கும்பலின் பிடியில் சிக்காமல், உளவியல் மற்றும் கலாச்சார மானுடவியல் பார்வையில் படிக்கவேண்டும். அதுவே ஒரு சிறந்த சிந்தையாளருக்கான அடையாளம்.
மகாபாரதத்தை பலர் பல மொழிகளில் எழுதினாலும், வியாசருக்கு பின் வந்த முனிகளும் கவிகளும் பல கிளைக்கதைகளை சேர்த்தும் குறைத்தும் இருக்கிறார்கள். அனால் வியாசர் எழுதியதை யாரும் மாற்றவில்லை. கிளைக்கதைகள் மட்டுமே கூடின. ஆனால் இராமாயணம் அப்படி இல்லை. பல மொழிகளில் பல சம்பவங்களும் பல விதகமாக மாற்றப்பட்டுள்ளது. உ.ம் கைகேயி தசரதனுக்கு எத்தனையாவது மனைவி என்பதிலேயே வால்மீகி இராமாயணத்துக்கும் கம்பராமாயணத்துக்கும் வேறுபாடு. சீதையின் பிறப்பு, சூர்பனகையுடன் ராமன் நடத்தியல் உரையாடல், கடத்தப்படுவதற்கு முன்பு சீதை லக்ஷ்மனிடம் கூறிய கோப வார்த்தைகள் என்று பல முரண்கள், பல ராமாயணங்களில்.இந்த புத்தகத்தில் இராமாயணம் ஒரு கதை போல சொல்லப்பட்டு, கதை மாந்தர்களின் மனநிலை மற்றும் செயல்பாடுகள் ஆராயப்பட்டு, விமர்சிக்கப்பட்டு கூடுதலாக பல முக்கிய நிகழ்வுகளில் வால்மீகி, கம்பர், துளசிதாசர் ஆகியோர் என்னென்ன கூறியுள்ளார்கள் என்றும் சொல்வது சிறப்பு. ஆங்காங்கே தாய்நாட்டு இராமாயணம் . இலங்கை இராமாயணம் குறிப்புகளும் உள்ளன. ராமர் காட்டிற்கு செல்வது வரை மிக விரிவாக எழுதப்பட்ட புத்தகம், ஏனோ சூர்ப்பனகை வருகைக்கு பிறகு அவசர அவசரமா முடிக்கப்பட்டது போல உள்ளது. ராமாவதாரத்தின் நோக்கம் என்று பல முறை ஆசிரியரால் கூறப்டும் ராவண அழிப்பு நிகழ்ச்சி எதுவும் விளக்கப்படவில்லை. ராவணனின் பெருமைகளாக கம்பர் கூறியுள்ள எந்த ஒரு விஷயமும் குறிப்பிடப்படவில்லை என்பது பெரிய நெருடல். ராமாயணத்தை ஆராய்ந்து அறிஞர்கள் கூறிய கருத்துகளும் சில இடங்களில் குறிப்பிடப்படுவது கூடுதல் தகவல்களாக நமக்கு கிடைத்துள்ளது. சூர்ப்பனகை வருகைக்கு பிறகான நிகழ்ச்சிகளும் விரிவாக கூறப்பட்டிருக்குமாயின் , மிகச்சிறப்பான நூலாக இருந்திருக்கும். எப்படி பார்த்தாலும் எளிதாக புரியும் வகையில் மிக விரிவாக ராமாயணத்தை விளக்கிய சிறப்பான புத்தகம்.
ஆயிரம் சொன்னாலும், இராம இதிகாசம் என்பது உலக மனிதர்களின் எண்ணம், குணம், வாக்கு, செயல், இந்த இந்த தருணங்களில், இப்படி இப்படி இருத்தல் தான் செம்மை என அறிவுறுத்தும் கருத்துப் பொக்கிஷம்.
இராமன் என ஒரு நபர் இருந்ததில்லை., இராமர் பாலம் கிடையாது., இராமன் ஆரியன், தமிழரல்ல, இராவணன்தான் தமிழன் என இப்படி முரணான கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும்.,
இராமாயணத்தில் சொல்லப்பட்ட மேன்மையான நிகழ்ச்சிகள் மூலம் மகத்தான கருத்துக்களுக்காக, ஒருமுறையேனும் வாசித்து விடுவது மிக உன்னதம்.
இவ்வளவு மகத்தான உன்னதமான மிகவும் மேன்மையான மனிதர்கள் கூட இருப்பார்களா? என வினவும்படியான இராம காதையில் இடம்பெற்றவர்களின் குணங்கள் அமைந்திருக்கிறது.
அந்த அளவுக்கு இரசமாக வால்மீகியும் கம்பரும் இராமாயணத்தை இயற்றியிருப்பதாக, தற்போது மறைந்த திரு #பிரபஞ்சன் இப்புத்தகத்தில் பல இடங்களில் சொல்லி, அயோத்தில் முதல் இலங்கை வரை அழைத்து செல்கிறார்.
இப்புத்தகம் வாசிக்கும் வரை, கேள்விபட்ட விஷயங்களில் ஒன்று, காவியங்கள் என்பது நம் வாழ்வின் சம்பவங்கள் இக்காவியங்களில் எங்கேனும் ஒரு இடத்தில் பொருந்திவிடும் என்பதுதான்.
இப்புத்தகத்தை வாசித்த பின் அது உறுதி செய்தாலும், நாம் நமக்கு ஏற்படும் சிக்கல்களையும் பிரச்சினை களையும் எப்படி அணுகுவது என்பதையும் மறைமுகமாக சொல்கிறது இக்காதை.
அதேபோல ஒழங்குமுறை, ஒழக்கம், நற்பண்பு முதலியவைகளையும் உள்ளடக்கி பொதிந்து வைக்கபட்டிருக்கிறது.
தந்தை-மகன், கணவன்-மனைவி அண்ணன்-தம்பி அண்ணன்-தங்கை தந்தை-மகள் சமவுரிமை பெண்ணியம் அரசன்-அமைச்சர்கள் அரசன்-மக்கள் மனிதம் இயற்கை என குடும்பம் முதல் சமூகம், உலகம் என அனைத்தும், இவ்வழி நடந்தாலொழிய அனைவர்க்கும் மேன்மை அமையாது என்பதை இராம காதை மூலம் தெளிவுபட விளக்கவுரை தந்துள்ளார் திரு#பிரபஞ்சன் அவர்கள்.
என்னை பொருத்தவரை தேவ-அசுர என இருவேறு குலங்கள் இருப்பதாக நினைக்கவில்லை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேவ குணமும், அசுர குணமும் ஒருங்கே இருப்பதாகவே நம்புகிறேன்.
நேரத்திற்கேற்ப அவை வெளிப்படுகின்றன. அப்படியாகவே இராமாயணக் கதையையும் பார்க்க வேண்டும். இதில் மதம் என்பதை நுழைத்து நல்ல கருத்துகளக மற்றவர்களிடம் கொண்டு சேர்க்காமல் விடுவது, உண்மையில் கவலைக்குரியது.
இராமனை கடவுளாக பார்ப்பதை விட நற்குணங்களையும், நற்சிந்தனைகளையும் கொண்ட மனிதனாக, உதாரண புருஷனாக பார்க்க வேண்டும் என்பதே இராமாயணத்தின் நோக்கமாக இருக்கிறது என்பதாகவே நாம் கருதுகிறோம்.