எழுதப்பட்ட வரலாற்றின் வழியாக அல்லது இலக்கியங்களின் மூலமாக அல்லது பயணத்தின் ஊடாக அல்லது பண்பாட்டின் கூறுகளாக.
இவற்றில் ஜெயமோகன் பிந்தைய இரண்டையும் தேர்வு செய்திருக்கிறார்.அதன் வழியாக முந்தைய இரண்டையும் ஆராய்ந்திருக்கிறார்.இந்தியாவை அறிந்துகொண்டு அறியவைக்க முயற்சித்திருக்கிறார்.
எல்லா நிலங்களும் உயிருள்ளவைதான்.தட்பவெப்பம் சார்ந்து அவற்றின் குணநலங்கள் உருவாகின்றன.சுருக்கமாகச் சொல்வதென்றால் நிலங்களே அங்கு வாழும் மனிதர்களின் உருவத்தை செதுக்குகின்றன.
அந்த வகையில் இந்தியாவின் முகம் எது என்ற தேடலுக்கான விடையே இந்த ‘முகங்களின் தேசம்’நூல்.மாநிலங்களாகப் பிரிந்திருக்கும் நிலப்பிரதேசங்கள் எந்தக் கண்ணியில் ஒன்றிணைகின்றன என்பதைத் தன் பார்வையின் வழியே அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஜெயமோகன்.
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
நண்பரின் நச்சரிப்பால் ஜெயமோகன் அவர்களின் சிறுகதைகள் இரண்டை படித்திருக்கிறான், ஆனால் அவை எதுவும் பெரிதாக உறுத்தவோ, பாதிக்கவோ, யோசிக்கவைக்கவோ இல்லை. இந்த பயணக்குறிப்பு/பயண கட்டுரையான "முகங்களின் தேசம்" என்னை மிகவும் ஆட்டிவைத்தது. ஒரு எழுத்தாளனின் எழுத்தை படிக்கும்முன் அவர் கடந்து வந்த பாதையை அறிவது எவ்வளவு முக்கியம் என்று இந்த புத்தகத்தின் மூலம் நன்றாக தெரிந்துவிட்டது.
புத்தகத்தில் சிறிய ஆனால் நிறைய அச்சு பிழைகள் இருந்தாலும்(repetition /duplicates), அது ஒரு குறையாகவே இல்லை.
படிக்க படிக்க ஆசிரியர் மேல், பொறாமை, வருத்தம், அனுதாபம், எல்லாம் வருகிறது. ஓரிரு இடத்தில், அவர் ரொம்ப பீற்றிக்கொள்கிறமாதிரியும் உள்ளது.
எனது மீண்டும் மீண்டும் படிக்கவேண்டிய புத்தக பட்டியலில் இதுவும் சேர்ந்துவிட்டது.
இந்தியா என்பது ஒரு வார்த்தை அல்ல. இந்தியா என்பது பல கோடி முகங்கள். இங்கே ஒவ்வொரு அசைவிலும் kaleidoscope மாறிக்கொண்டே இருக்கும். எவ்வளவு பயணம் செய்தாலும் சலிக்காது. ஒவ்வொரு ஊரும் ஏதாவது ஒரு புதியதை தரும். பெரும்பாலும் நல்ல அனுபவங்களை தரும். ஒரு சுற்றுலா குறிப்பாக அல்லாமல், வாழ்க்கை குறிப்புகளாக, தத்துவ/ஆன்மீக தரிசனங்களாக, இலக்கிய கட்டுரைகளாக, சில இடங்களில் விமர்சனமாக இத்தொகுப்பை எழுதியுள்ளார் ஜெ என்னும் எழுத்தாளர் ஜெயமோகன். அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். பயணம் செய்வோர் கண்டிப்பாய் வாசிக்க வேண்டும்
If you are the one to enjoy a travelogue in Tamil language, you would enjoy this book which has 54 chapters, all about the author’s travel experience in India and Bhutan. Some chapters are about same travel experience and place in a slightly different aspect which could’ve been in the same chapter. 41st and 42nd chapter had repetition which is either printing or editing error I guess. Simple usage of language and casual conversations make it easier for younger readers also to understand. The book not only speaks of good experiences, but also real life travel challenges and people’s stories.