இந்த புத்தகம் என்னுடைய முதல் முயற்சி. இது போல இன்னும் பல முயற்சிகள் செய்ய என் முதல் படியை எடுத்து வைத்துள்ளேன். இதுவரை பேஸ் புக்கில் மட்டுமே என் திறமைகளை காட்டி வந்த எனக்கு அமேசான் காட்டிய வழி. இனி கதை பற்றிய ஒரு முன் குறிப்பு. இரண்டு இதயங்களுக்குள் பூக்கும் அழங்கான காதலும் அந்த காதலில் ஏற்பட்ட மோதலின் பிரிவால் இருவரும் பிரிவதும் சந்தர்ப்ப சூழ்நிலையால் இவர்கள் பெற்றோர் இவர்கள் ஏற்கனவே காதலித்தவர்கள் என்பது தெரியாமல் திருமணம் செய்து வைத்து பிடித்தும் பிடிக்காமல் வாழ பழகுகின்றனர். ஆனால் உள்ளுக்குள் இருவருக்கும் உள்ள காதல் அழியாமல் தான் இருந்து வந்தது. ஒருவரை ஒருவர் வெறுத்தாலும் மனதளவில் இவர்கள் பாசம் இருந்து கொண்டே தான் இருந்தது. அது சாகாத காரணத்தால் தான் இவர்கள் கடைசியில் மனம் ஒத்து ஒன்று சேர்ந்து தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். இவர்கள் வெறுப்பு எப்படி மீண்டும் காதலாக மாறியது எப்படி இவர்கள் காதலில் நடந்த கசப்புகளை மறந்து மீண்டும் சேர்ந்தார்கள் என்பதே கதை. நிச்சையம் உங்களுக்கு பிடிக்கும். கதை மிகவும் நீளம் இல்லாமல் விரைவாக படித்து முடிப்பதற்கு ஏற்றார் போல பின்ன பட்டுள்ளது. புகழ் பெற்ற இந்திய எழுத்தாளர் சேட்டன் பகத் அவர்களின் ஒரு ஆங்கில சிறு கதையை தான் இதன் மூல கதை. இதற்கு என் கற்பனையில் தமிழாக்கம் கொடுத்து என் நடையில் எளிதாக புரியும் படி எழுதி முடித்துள்ளேன். உங்கள் நேரம் நிச்சியம் பொன்னாகும் என் கதையை வாசிக்கையில் ஆம் அந்த உறுதியை நான் எந்த யோசனையும் இன்றி வழங்குவேன் என் எழுத்து நடையை நம்பி. . . .படியுங்கள் இனி என் படைப்புகள் தொடரும். . நன்றி. இப்படிக்கு நந்தினி
தன்னிலைப்படுத்தித் தொடங்கும் எழுத்தில் கல்லூரி காலக் காதலும் அப்பொழுது அவர்களுக்குள் எழும் உரிமை போராட்டங்களும் அதைக் கையாளத் தெரியாமல் வீரியமிக்க வார்த்தை வீசி காதலர்கள் ஒருவருக்கொருவர் மனதை கீறிக் கொண்டு பிரிந்து சென்ற மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காலத்தால் அவர்கள் திருமணப் பந்தத்தில் நுழைகின்றனர்.
கதை என்ற அமைப்பில் வராமல் மேலோட்டமாகச் சில சம்பவங்களின் சேர்க்கை.
Wow.what a novel .superb feeling throughout .very well written.a must read .sure whoever reads will have this in their memory.hats off to u Nandini.great.