வாசலில் நின்றிருந்தவர் ‘‘உள்ள வாங்கோ… இருக்கார்” என்றார். அவர் யாரென தெரியவில்லை. ‘‘வணக்கம்” என்றபடி செருப்பைக் கழற்றினேன். அவர் செருப்பைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். ‘‘வெளியே போட்டா நாய் தூக்கிட்டு போய்டுது சார்… உள்ளே போங்கோ.”
அகலமான கல் வேய்ந்த திண்ணைக்கு அப்பால் அங்கணத்தில் முன்மதிய வெயில் வெண்ணிறத் திரைச்சீலை தொங்கிக்கிடப்பதுபோல தெரிந்தது. பக்கவாட்டில் நீளமான திண்ணை போன்ற அறையில் தாழ்வான தூளிநாற்காலியில் பெரியவர் அமர்ந்திருந்தார். மடியில் பித்தளை வெற்றிலைச்செல்லத்தை வைத்துக்கொண்டு பாக்குவெட்டியால் கொட்டைப்பாக்கின் தோலைச் சீவிக்கொண்டிருந்தார். மூக்குக் கண்ணாடி கொஞ்சம் நழுவி அமர்ந்திருக்க முகத்தில் விளையாடும் குழந்
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
இளங்கோவின் சிலப்பதிகாரம் மூன்று உண்மைகளைத் உணர்த்துகிறது.
1) அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் 2) உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் 3) ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
இதில் முதலானதாவது சொல்வது என்னவென்றால் – “செங்கோல் வளைந்தபின் உயிர் வாழ்தல் நன்று அன்று. அறமே எமனாக மாறும்” என்பது. அதற்கு ஏற்றார் போல், தெரியாமல் செய்த தவறுக்காக, பாண்டியன் தன் உயிரைக் கொடுத்து நீதியை நிலை நாட்டுகிறான். அறம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை சிலப்பதிகாரம் சொன்னதுபோல், ஜெயமோகனின் "அறமும்", ஒரு நிஜ மனிதனின் கதை மூலமாக சொல்கிறார்.
ஜெயமோகன் ஒரு மூத்த எழுத்தாளரை (பெரியவர்) காண செல்கிறார். ராயல்டி (உரிமைப்பங்கு) பற்றி ஆரம்பித்த பேச்சு, புத்தகம், எழுத்து, சரிகை வணிகம் என்று பெரியவரின் உரையாடல் நீள்கிறது. ஒரு கட்டத்தில், தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை சொல்கிறார். ஒரு செட்டியார் சகோதரர்களால் பெரியவர் ஏமாற்றப்பட்ட கதை அது. பள்ளி மாணவர்களுக்காக சரித்திர புருஷர்களின் வாழ்க்கை வரலாறு ராப்பகலாக எழுதி கொடுக்கிறார். மொத்தம் 5000 ருபாய். இதை வைத்து தன் மகளுக்காக திருமணம் ஏற்பாடு ஒரு புறம் நடக்கிறது. ஆனால் செட்டியார், மீதி பணமான 3000 கொடுக்காமல் ஏமாற்றுகிறார்.
செட்டியாரின் மனைவியிடம் (ஆச்சி) நடந்ததை சொல்ல சொல்ல, பெரியவர் அவர் குடும்பத்திற்கு வெண்பாவை ஒன்றை எழுதி சாபமிடுகிறார். ஆச்சியோ, செட்டியாரிடம் சண்டையிட்டு பணம் மீட்டு தருவதோடு கதை முடியும்.
இதில் இறுதியில் நடக்கும் சம்பவம் மிக முக்கியம். ஆச்சி ஒரு நவீன கண்ணகியாக திகழும் தருணமும், பணம் வாங்க என்ன செய்தார் என்பதே அறத்தின் சாட்சி. சிலப்பதிகாரத்தில் பாண்டியன் தவறை உணர்ந்து உயிர்நீத்து அறம் காத்தான். ஆனால் இங்கு செட்டியாரிடம் அறம் இல்லை. மாறாக அறம் ஆச்சியிடம் இருந்தது.
பின் குறிப்பு : அந்த பெரியவர் தான் - எழுத்தாளர் எம்.வி வெங்கட்ராம். சிவகார்த்திகேயன் நடித்த "மாவீரன்" படத்தின் கதை, இவர் எழுதிய "காதுகள்" நாவலை தழுவியதாகும்.
'தருமம் மறுபடி வெல்லும்' என்ற வாக்கை நிலைநிறுத்துமாறு ஒரு மணியான கதை. அறத்தை மறந்தவனை. அறம் பாடியே அழிக்கும் வலிமை அந்த சகலகலாவல்லி சரஸ்வதியின் அருள் பெற்ற புலவனுக்கு உண்டு என்பதைத் தெளிவுறுத்தும் திறம்பட்ட எழுத்து ! திரு.ஜெயமோகன் அவர்கள் எழுதிய 'அறம்' என்ற சிறுகதை யைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது இன்று! ஆசிரியரே வேறு ஒரு முதிய எழுத்தாளரை நேரிட்டுக் கண்டு பேசுவதாக உள்ள உத்தி எழுத்துக்கும் சுவை சேர்க்கிறது ! ஆரம்பமே கனஜோர் ! இடையிடையே புதுமைப்பித்தன் அவர்களின் எழுத்துக்களை மேற்கோள் காட்டும் விதம் அருமை ! வயதான எழுத்தாளர் பாக்கு வெட்டியால் சீவுவதைக்கூட மிகுந்த அழகுடன் சொல்லியிருப்பது , வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பை ராகம், தாளம், கவிதை என்று முத்தாய்ப்பு வைக்கும் அழகு, சூடான காப்பியில் சூடு மட்டும்தான் தெரியும் என்று சொல்லும் சுரீர் வசனம்,.....இப்படி விறுவிறுப்பபுக்கு எடுத்துக்காட்டாக சொல்லிக் கொண்டே போகலாம் ! கும்பகோணத்தின் பெருமையை அவ்விடத்தாரின் சங்கீத ஞானம், வெற்றிலை மென்றுகொண்டே பேசுதல்,ராயர் கிளப் காபி டிபன் பற்றிய பேச்சு, தனி ஓட்டி சரிகைத் துணி நெய்த பெருமை, -. போன்றவை படிக்கப் படிக்க மனதைச் சுண்டியிழுத்து பழைய நாட்களுக்கு என்னைக் கொண்டு சென்றது !
அருமையான கதை ! கிழக்குப் பதிப்பகத்தாரின் வெளியீடு! அமேசானில் மின்னூலாகவும் கிடைக்கிறது.
• Author fantastically articulates the emotions of a poor writer, his sorrow, his poverty, his situation. • I must say that Jeyamohan is one of the author who articulates human emotions in a unbeatable manner. • We are in days where people hardly respect things like ethics, moral values etc., • Author presents a short, crisp story which will definitely wake up the moral values of any person. That's the victory of the author, I believe, waking up one's inner self / morality. • A must-read for now-a-days where "Moral values" are hardly seen.
This short story emphasis on how one should abide by dharma.Never take others hardwork for granted.Characters in this story are strong and leaves us a long lasting impact.