மறைந்து போன புதையலைத் தேடிப் புறப்படும் பயணம் ஏமாற்றங்களையும் அதீத உழைப்பையும் கோரி நிற்கும்.
இங்கிலாந்தில் இருந்து புறப்பட்ட கப்பல் தங்கம்,வெள்ளியை டன் டன்னாக வைத்துக்கொண்டு இந்தியாவிற்குப் பயணப்படுகிறது.கடலில் ஏற்பட்ட சூறாவளியால் கப்பல் ஜூலி மூழ்கிப் போக நூற்றி நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த குறிப்புகளைக் கொண்டு மல்லிக் அந்தப் புதையலைக் கைப்பற்ற செல்கிறான்.
மல்லிக்குடன் சேர்ந்து மொத்தம் மூன்று குரூப் மூழ்கிய கப்பலை தேடிக் கொண்டிருக்கின்றன.
சம்பகா மல்லிக்குத் துணையாக இருக்கிறாள்,புதையலுடன் சேர்ந்து மூழ்கிய கப்பலையும் கண்டுபிடிக்கின்றனர் ஆனால் தேடிக் கொண்டிருக்கும் மற்றவர்கள் கண்ணில் அது படக்கூடாது என்று கடலுக்குள்ளே திரும்பவும் அது மூழ்கடிக்கப்படுகிறது.சலசலப்புகள் அடங்கிய பிறகு அதை மேலே எடுக்கலாம் என்ற மல்லிக் முடிவுடன்.