எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
முகலாயர்கள் : பாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் திணித்து விடுகிறது நம் பாடப்புத்தகம். உண்மையில் அது ஒரு பிரம்மாண்டமான சரித்திர சமுத்திரம். நாம் இதுவரை பார்க்காத பக்கங்கள் மிக நிறைய! அத்தனையும் அற்புதம் சுமந்த பக்கங்கள். பல கைக்குட்டை கிராம ராஜ்ஜியங்களாக இருந்த துணைக் கண்டத்தை முதல் முதலில் ஒரு பிரம்மாண்டமான தேசமாக்கும் முயற்சி முகலாயர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது. ஆந்திர எல்லை வரை ஔரங்கசீப் படையெடுத்திருக்காவிட்டால் இந்தியா (அன்றைக்கு ஹிந்துஸ்தான்) உருவாக இன்னு&#
முகலாயர்கள் இன்றும் பேசப்படும் ஒரு பெரிய சாம்ராஜ்யம். ஒட்டுமொத்த இந்தியாவையும் கைப்பற்றிய அவுரங்கசீப் பிறகு முகலாயர்களின் ஆட்சி விழத்தொடங்கியது.முகலாயர்களின் ஆட்சி காலத்திலேயே அக்பருடைய ஆட்சியும் ஷாஜகான் உடைய ஆட்சியும் தான் பெரிதும் போற்றப்பட்டு வந்தது. அதுவும் அக்பருக்கும் ஜோதா பாய் இடையே இருக்கும் காதல் மிகவும் பிரசித்திபெற்றது அதை மிகவும் எளிமையான முறையிலும் ரசிக்கக் கூடிய முறையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம் என்றால் அது அவுரங்கசீப் ஆட்சி காலம் தான் ஏனென்றால் எந்த மாமன்னர் நெருங்க முடியாத தமிழ் சாம்ராஜ்யத்தின் கைப்பற்றி தன் ஆட்சியின் உள் வைத்திருந்தார்.ஆனால் அவர் ஒரு கொடுங்கோலாட்சி மன்னன் என்பதால் அவரது ஆட்சியும் மிகவும் போற்றப்பட வில்லை.