ஆசைக் கொண்ட மனதிற்கு எதிராக எடுத்த முடிவுகள் அனைத்தும் தவறான பாதையில் நிறுத்திவிடுவதில்லை.தன் வாழ்க்கை எந்தவிதத்தில் அமைத்துக் கொள்ளப் போகிறோம் என்ற தெளிவே நீண்டு போகும் பாதையின் வெளிச்சமாகிறது..
தன் தந்தையைப் பற்றி நன்கு அறிவந்தவளே என்றாலும் ஜெனியால் காதல் வலையில் தப்ப முடியாமல் மாட்டிக் கொள்ள அந்தஸ்த்தை காரணம் காட்டி அவளின் தந்தை ராஜேஷ்வுடனான காதலுக்குத் தடுப்பு அமைத்துவிடுகிறார், நெருங்கியவர்களைத் துன்பப்படுத்தி அப்படி என்ன வாழ்ந்துவிடப் போகிறோம் என்ற முடிவுக்கு இக்காதலர்களைக் கொண்டு வந்ததால் பிரிவை முன்மொழிந்துவிடுகின்றனர்.
தோல்வியடைந்த காதலில் இருந்து மெல்ல வெளியே வரும் ஜெனிக்கு அக்கா கணவரின் தம்பியான விஜய்யின் காதல் அரவணைத்துக் கொள்கிறது.பெரியவர்களின் விருப்பத்துடன் தான் பேரன்பு வைத்துக் கொண்டிருக்கும் ஜெனியையே கைப்பிடிக்கிறான் விஜய்...
வாழ்வில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் போராட்டத்தில் வெற்றியடைந்த ராஜேஷ்க்கு ரூபிணியுடனான காதல் துளித்து அவனுக்கான வாழ்வின் இனிய பக்கத்தைத் திறந்து வைக்கிறது..
புரிந்து கொண்டு வாழ்பவர்களே வாழ்வை திகட்ட திகட்ட வாழ்ந்து மடிகின்றனர்...