எந்த வடிவத்திற்குள்ளும் சிக்காமல் கதைக்குத் தேவையான வடிவத்தை விதம் விதமாக உருவாக்கிக் கொள்கின்றன பிரேக் அப் குறுங்கதைகள். அதேபோல எந்த எழுத்து நடைகளிலும் மாட்டிக்கொள்ளாமல் வெவ்வேறு விதமான எழுத்து நடைகளில் கதைகள் சீறிப் பாய்கின்றன. பித்துப்பிடித்த நிலையில் உருவாகும் பிரேக் அப்கள் அதே பித்து நிலையில் பகடியாக எழுதப்பட்டிருக்கின்றன.*அராத்து பாண்டிச்சேரியில் பிறந்து, கடலூர் மாவட்டம் புவனகிரியில் வளர்ந்தவர். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதிவருவதன் மூலம் கவனம் பெற்றவர். நீயா நானா உட்பட்ட பல தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார். விகடன், குமுதம் மற்றும் அந்திமழையில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
இன்று இயல்பாகவே அவசரமும் பரபரப்பும் நம் வாழ்க்கை முறையில் வந்து விட்டது அதற்கேற்றார் போல் அவசர காதல் அதே வேகத்தில் அவசரமாக பிரேக்கப்பில் முடிந்து விடுகிறது. இரண்டாயிரத்தில் பிறந்த குழந்தைகள் கூட இன்று சர்வ சாதாரணமாக இரண்டு மூன்று பிரேக்கப் சந்தித்து இருக்கிறார்கள் அப்படியான விதவிதமான பிரேக் அப் கதைகளை சிறிய சிறிய கதைகளாக எழுதப்பட்டதுதான் இந்த நூல். ஆணாய் பிறந்த அத்தனை பேரும் காதலித்தே ஆக வேண்டும் தனக்கு ஒரு ஆள் இருந்தே தீர வேண்டும் என்று நினைக்கிறார்கள் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருவதால் அவரவர்கள் தங்களது முயற்சிக்கு ஏற்றார் போல் காதலிகளை கண்டுபிடித்து டார்ச்சர் செய்து, மிரட்டி ,ஏன் கொலை கூட செய்து காதலிக்கிறார்கள். ( வெட்டியே போடுவேன்டி, கொண்டே போடுவேன்டி போன்ற தமிழ் திரைப்படங்களின் வசனங்களை நினைவு கூறுக) ஒரே கருவை கொண்ட கதைகளை தொடர்ந்து மீண்டும் மீண்டும் வாசிக்கும்போது கொஞ்சம் சலிப்பு ஏற்படுகிறது ஏழு எட்டு கதைகளை குறைத்து இருந்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கும். இந்த கதைகள் அனைத்துமே உண்மையான கதைகள் தங்கள் நண்பர்கள் மூலம் கதைகளை திரட்டி எழுதி இருக்கிறார் .உண்மையில் சிலரிடம் இப்படியான கதைகள் இருக்கும் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ஆனால் இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைவரிடமே ஒரு பிரேக்கப் காண கதைகள் இருக்கத்தான் செய்கிறது.
Yen da indha book aa Vaangi padicanu iruku... But society la nadakara vishayam than.. I never recommend this for anybody.. Full of B grade stories.. Really very much disappointing ini Arathu Book vaanga 200% yosicu than Vanganum... Idhula Unmai Sambavangilin Kurungkadhaikal aama full of Sex.. 170 Rs utter waste..
இலவசமாக கிடைத்தாலும் இப்புத்தகத்தை படித்துவிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். அப்படி இலவசமாக படித்த அனுபவத்தில் சொல்கிறேன். இப்புத்தகம் தற்கால காதல் பற்றிக் கூறினாலும் அதை வக்கிர கோணத்தில் விரச கண் கொண்டு சொல்கிறது. அராத்து சாருவின் பள்ளியை சேர்ந்தவர் என அனைவரும் அறிந்ததே. சாருவின் எழுத்தை சுஜாதா மலம் என விமர்சித்துள்ளார். அதை சார்ந்த அராத்துவின் எழுத்தும் நாறவே செய்கிறது. இப்புத்தகம் தமிழ் இலக்கியத்திற்கு அவசியம் என்றெல்லாம் இல்லை, எழுதபடாமல் இருந்திருந்தாலும் எந்தவொரு இழப்பும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு இருக்காது. நல்ல புத்தகம் படித்ததும் ஏற்படும் உவகைக்கு எதிர்மறையான உணர்வே இப்புத்தகத்தை படித்ததும் உணர்ந்தேன்.
Modern relationship and breakup stories of rich people who lives in metro towns, mostly. Little adultery / seductory involved. Raw and lacks subtle. Not my cup.of tea.