பேராசிரியர் கே.ராஜய்யனின் இந்நூல் 40 ஆண்டுகால உழைப்பில் கிடைத்த அறுவடை. தமிழரின் மத – ஆன்மீகத் தத்துவத்தைத் திராவிடம் என்று தனித்துக் கூறுவதுடன், இழந்துபோன தமிழ் அடையாளத்தை மறு கண்டுபிடிப்புச் செய்கிறது. களப்பிரர் காலம் இருண்ட காலமல்ல, அவர்களது காலத்தில்தான் குறளும், சிலம்பும், மேகலையும் உருக்கொண்டன. அது சமண – பௌத்தர் மேலோங்கியி ருந்த காலமாதலால், இருண்ட காலமாக்கப்பட்டது என்கிறது. பழங்காலத்திலிருந்து, விடுதலை பெற்றது வரையிலான ஆட்சியதிகாரம் சார்ந்த வரலாற்றுடன் நின்றுவிடாமல், தமிழீழப் போராட்டம் வரையிலான நவீன வரலாற்றையும் சேர்த்து, தமிழரின் பண்பாட்டுக் கொடையினையும் வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம
இந்த புத்தகம் வழியாக நான் தெரிந்து கொண்ட விசயங்கள் பல. சங்கத்தமிழ் முதல் திராவிட இயக்கம் வரைக்கும் உள்ளடங்கிய இந்த புத்தகம் அனைத்து தமிழ் நெஞ்சங்கள் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.