Jump to ratings and reviews
Rate this book

கேசம் [Kesam]

Rate this book

Unknown Binding

9 people are currently reading
70 people want to read

About the author

Naran

10 books7 followers
Writer, Poet and Publisher

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
20 (40%)
4 stars
27 (54%)
3 stars
2 (4%)
2 stars
1 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Maragatham Munusamy.
23 reviews4 followers
April 26, 2024
இந்தப் புத்தகம் மனதின் விளக்க முடியாத உணர்வுப் பெருக்கங்களை சுற்றி வரையப்பட்ட 11 சிறுகதைகளின் தொகுப்பு.

நிறங்களை காட்சிப்படுத்த நரன் அவர்கள் கையான்டிருக்கும் உவமைகள் தனித்துவமாக விளங்குகிறது.

ஏன்,எதற்காக இதை செய்கிறார்கள், எது இவர்களை இவ்வாறு செய்ய உந்துகிறது போன்ற காரணங்களை எல்லாம் விட்டுவிட்டு இது இவ்வாறு தான் எனக் காட்டும் விதமாக கதைகள் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
Profile Image for Muthu.
27 reviews3 followers
November 17, 2022
Great and Interesting collection of stories
Profile Image for Ananthaprakash.
96 reviews2 followers
February 1, 2026
எல்லா கதைகளும் முற்றிலும் புதிய களம், எல்லா கதை மாந்தர்களும் பெரிதும் வேறெந்த கதைகளிலும் பார்த்திராத கதாபாத்திரங்கள்.

இந்த தொகுப்பில் உள்ள எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் குறைபாடுடையவர்கள், உடலால், உணர்வால், உணர்ச்சியால், மனத்தால், மனிதர்களால், மனிதத்தால்.

உடலின் குறைகள் அத்தனை வெளிப்படையாய் வெளியில் தெரிந்தாலும், உணர்வின், உணர்ச்சியின் குறைகள் அத்தனை வெளிப்படையாய் வெளியில் தெரிவதும் இல்லை, ஒரு போதும் அடங்குவதாயும் இல்லை.

என்னதான் குறைபாடுகள் எல்லாம் உடலிலும், நுண்ணுணர் உறுப்புகளின் மீதுதான் என்றாலும் அதையெல்லாம்  தாண்டி அடக்க முடியா உணர்ச்சிகளின், பகிர முடிய உணர்வுகளின், மறுக்கமுடியா இச்சைகளின், தீர்க்க முடியா பசியின், மீள முடியா தனிமையின் - தேவையும், அதன் பொருட்டு படுகிற பாடுகளும், அடைய முடியா தருணத்தில் ஏற்படுகிற ஏமாற்றமும் என விரிந்து கிடைக்கும் மனிதர்களின் ஆழ்மன தொகுப்பு.

வாசித்து முடித்த பின்னும், தீயில் பொசுங்கும் ரோமத்தின் வாடையும், தொடுதலின், ஸ்பரிசத்தின் தேவையை உணர்த்தும் ஆவுடையின் தாய்மையும், சர்க்கஸ் கூடாரத்தின் அடங்காத பசியும், காமத்தையும், தனிமையையும், அடங்காத, தீராத கோபத்தின், தீர்க்கிற வடிகளாய் நிற்கிற ஆயத்த ஆடை கடைகளின் பொம்மைகளும், துருப்பிடித்து ஓரமாய் நிக்கும் மரியபுஷ்பத்தின் சைக்கிளும் - நினைவில் இருந்தும், நாசியில் இருந்தும், ஸ்பரிசத்தில் இருந்தும் விலக கட்டாயம் நிச்சயம் ஒரு சில நாட்கள் பிடிக்கும்.

கேசம் - தொட முடியா ஸ்பரிசத்தின், தீரா அகோர பசியின், மறுக்க முடியா காமத்தின், சுவாசிக்க முடியா நெடியின் தொகுப்பு.
Profile Image for Mini.
21 reviews3 followers
April 5, 2025
கேசம் : நரன்

“தன் மேல் அன்பு செலுத்தவும் தான், அன்பு செலுத்த யாருமே இல்லாத வாழ்க்கை” – இதே வரியால் நரனின் புத்தகத்தைச் சொல்வது சரியாக இருக்கும்.

கேசம் கதையின் நாயகன். காதல், காமம், ஒரே நேரத்தில் தனிமை – இவையெல்லாம் அவனுக்குள் ஒருங்கே நிகழ்கின்றன. அவன் பேசுவதிலும், மெளனத்திலும் கூட ஒரு பரிதாபம், ஒரு அழகு இருக்கிறது.

நரன், அவர் உருவாக்கிய இன்னொரு உள் உலகம் போலவே. அவரது எழுத்துகள் சும்மா இல்லை – சிந்திக்க வைக்கும்.
குறிப்பாக, “காமத்துக்கு தான் எத்தனை ஆயிரம் கதவுகள்… எந்த கதவு எப்போது திறக்கும் தெரியாது” இது மாதிரியான வரிகள் வாசிக்கும்போது நிறைய யோசிக்க வைக்கிறது.

எனக்குப் பிடித்தது:
கதாபாத்திரங்கள் ரொம்ப உண்மையாக இருந்ததுவரிகள் கவிதையை போல இருந்தது மனம் கொள்ளை கொள்ளும் சில நேரங்கள்

முடிவில்:
கேசம் – நரன்
ஒரு உணர்வுப் பயணம். சில புத்தகங்கள் பேசாததை இதுபோல் மெளனமாக சொல்லும்.
Profile Image for Mahesh.
123 reviews4 followers
April 7, 2022
Aathiappan is a 59 year old businessman who is suffering from a skin disease and his both legs are having decaying wounds and with band aid. Due to this condition his wife doesn't like him and she doesn't allow him to touch her. He gets frustrated and starts staying at his cotton godown and his only son brings a maid Avudayammal to help him and look after the godown.

What happens after is the crust of the story.
Displaying 1 - 5 of 5 reviews