மனித வாழ்வில் சோர்ந்துபோன நிமிடங்களை புத்துணர்ச்சியுடன் எழச் செய்பவை சிஹாபுதின் கதைகளின் சாரமாய் உள்ளது. இதற்குள் இடையூறாக எந்த ஒரு தத்துவமோ, வாகப்பாட்டிலலோ எக்கதைகளிலும் இல்லை. நம் வாழ்வின் நுட்பமான தருணங்களை நேர்த்தியாக சொல்கிறது. மலையாள மூலமான இந்நூலை அதன் அடர்த்தியும், சாரமும் குறையாமல் கே. வி. ஷைலஜா மொழிபெயர்த்துள்ளார்.
இந்த கதையை படித்து முடித்தவுடன் நமக்கு நம் கண்களின் மேல் கருணையே பிறந்துவிடும். அதுமட்டுமல்ல நம் உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்புமே தனித் தனி உணர்வும், உயிரும் உள்ளவையாக, நமக்காகவே ஒன்றாக இணைந்து நம்மை பாதுகாக்கும் கடமைகளை செய்யும் உறுப்புகளை இல்லை இல்லை உயிரிகளை பத்திரமாக அதீத பொறுப்புணர்வோடு பாதுகாக்க வேண்டும் என்று தோன்றும்.
உறுப்புகளை எப்படியெல்லாம் அலட்சியப்படுத்தி அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறோம் என்று எதையுமே குறிப்பிட்டு சொல்லாமல், வழியில் கண்டெடுக்கும் ஒரு கண்ணை பாதுகாக்கவும், அதை உரியவர்களிடம் சேர்க்கவும் போராடும் அந்த மனிதனின் மனிதாபிமானத்திலும், கருணையிலுமே அதை உணர்த்திவிடுகிறார் ஆசிரியர்.
சிஹாபுதின் பொய்த்தும்கடவு என்கிற மலையாள எழுத்தாளரின் சிறுகதையை தமிழில் மொழிபெயர்த்து நமக்கு படிக்க தந்த கே. வி. ஷைலஜா அவர்களுக்கு நன்றி.