சேவை என்றால் முதலில் நினைவுக்கு வரும் டாக்டர் தொழிலை பணத்திற்காக வியாபாரம் ஆக்கியவர்களைப் பிடிக்கப் போலீஸ் மேற்கொள்ளும் நாடகத்தைச் சொல்லும் கதையின் வரிசையில் இந்தக் கதையும் அடங்கும்.
ஸ்வப்னா என்ற பெண் கொடூரமாகக் கொல்லப்பட்டதில் இருந்து தொடங்குகிறது. இறப்பதற்கு முன் அவள் எந்தத் தகவலையோ கிரைம் பிராஞ்ச் ஆபிசர் விவேக்கிற்குச் சொல்ல முயன்ற க்ளு கிடைத்த உடன் குற்றவாளிகளைத் தேடும் வேட்டை ஆரம்பமாகிறது.
சினிமா டைரக்டரான அருள்மொழி வர்மன் ஸ்வப்னாவுடன் சேர்ந்து காஸ்ட்லியான பாக்டீரியாவை அவள் வேலை செய்யும் இடத்திலிருந்து திருட வைத்து பணக்காரர்களுக்கு அதைச் செலுத்து உடல்நிலை குறைவு ஏற்படுத்தி சிகிச்சை என்ற போர்வையில் பணம் கறக்கும் தொழிலில் ஈடுபட்டதும் நாள்படத் தான் செய்வது தவறு என்று புரிந்தவள் முரண்டுபிடித்ததால் அருள்மொழி வர்மாவாலே கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்படுகிறது.
க்ளாஸ்டீரியம் பொட்டுலிஸம் என்ற பாக்டீரியாவை வைத்துக் கோடிகணக்கில் சம்பாதித்து அதற்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்ட இலண்டன் டாக்டர் ஆர்தரை மடக்க நித்யாவை நோயாளியாக அனுப்பி வைத்து இன்டர்போல் போலீஸிடம் மாட்டி வைக்க விவேக் போட்ட நாடகம் நன்றாகவே வேலை செய்துவிட்டது.