ஒவ்வொரு செயலுக்கும் நியாயமான காரணம் எதாவது இருக்கலாம் அதைத் தெரியாமல் தங்களுக்குத் தவறிழைத்துவிட்டார்கள் என்று பழிவாங்க புறப்பட்டால் முடிவு எதிர்பாராததாகவும் அமையலாம்.
டீச்சராக இருக்கும் நித்திலா , தன் பெற்றோரின் காதல் திருமணம் தோல்வியடைந்ததால் ஆண்களையே வெறுப்பவள்.. தாய் இழப்பிற்குப் பின் தங்கை மட்டுமே சொந்தமாகி அவளும் காலேஜ் ஹோஸ்டலில் இருப்பதால் தனிமையைப் பழகப்படுத்திக் கொள்கிறாள்.
ரோட்டில் நாய் அடிபட அதைக் காப்பாற்ற உதவிய மெக்கானிக் சிபி மேல் காதல் மையல் கொள்கிறாள் நித்திலா. மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகளை உதாசினப்படுத்தி அவனுடன் உடலாலும் இணைந்த பிறகு தான் தெரிகிறது அவன் ஒரு பெரிய பிசினஸ் மேக்ன்ட் என்று. ஏன் பொய் சொல்லி பழகினான் என்று நியாயம் கேட்க போக..
அவனின் தம்பி இவளின் தங்கையைக் காதலிக்க,இவள் போலீஸ்சில் கேஸ் கொடுத்ததால் வீட்டை விட்டு எங்கோ சென்றவனைத் தேடி கண்டுபிடிக்க முடியாமல் போனதால் பழி வாங்கவே காதலிப்பது மாதிரி நடித்ததாகச் சொல்கிறான்.தற்போது தன் மாமன் மகளை மணப்பதாகவும் சொல்லியதால் எங்கிருந்தாலும் வாழ்க!!!!! என்று கண்ணீருடன் வாழ்த்தி தான் இந்தக் கதையின் ஹீரோயின் என்று அழுத்தமாகப் படிப்பவர்களுக்கு இப்படியும் ஒரு பெண்ணா என்று ஆச்சரியப்படவைக்கிறார்...!!!!
அவள் நினைவிலே கார் ஒட்டி விபத்துக்குள்ளாகி இருப்பவனைத் தம்பி தேடி வந்து அவர்கள் மேல் தப்பில்லை அனைத்திற்கும் தான் மட்டுமே காரணம் என்று சொல்லி அண்ணனை அண்ணியிடம் மன்னிப்பு கேட்ட வைக்கிறான்.