ரமணி உணவு மேஜைக்கு வந்தார். ஆவி பறக்கும் வெண் பொங்கல், வடை சட்னி சாம்பாரோடு தயாராக இருந்தது. பட்டுதான் பரிமாறினாள். அவர் ரசித்து ருசித்துச் சாப்பிடத் தொடங்கினார். “சமையல் அற்புதமானஒரு கலை பட்டு! சில பேராலதான் உன்னைமாதிரி அற்புதமாகச் சமைக்க முடியறது!” சாப்பிட்டு முடித்தார். “நான் ஆத்துக்குப் போயிட்டு ஒரு மணி நேரத்துல வந்துர்றேன்!” “எதுக்கு?” “கார்த்தால கஞ்சியைக் குடிச்சிட்டு மூணும்கிடக்கும். சமையல் பண்ண வேண்டாமா?” “நீ ஏன் தனியா பண்ற? எப்படியும் இங்கே சமைக்கப் போறே! அதுல உன் குழந்தைகளுக்கும் எடுத்துண்டு போ!” “அது தப்பு! செய்யற வேலைக்குச் சம்பளம் தர்றேள். அப்புறம் சாப்பாட்டையும் எடுத்துண்டு போனா நியாயம் இல்லை!” “இந்த வெய்யில்ல ரெ