எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
ஐம்பதாயிரம் பிரதிகள் விற்ற “இட்லியாக இருங்கள் - எமோஷனல் இன்டெலிஜென்ஸ்” நூலின் இரண்டாம் பாகம்.அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை.அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்கையும்கூட பெருமளவில் தகர்ந்துவிட்டது. இப்போது உலகை ஆண்டுகொண்டிருப்பது EQ எனப்படும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே.உள்ளுணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியான முறையில் கையாளும் கலையை யார் திறன்படக் கற்கிறார்களோ அவர்களே இன்று வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல படிப்பு, அலுவலக
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0- சோம. வள்ளியப்பன் - கட்டுரை தொகுப்பு - கிழக்கு பதிப்பகம் - பக்கங்கள் -216 - முதல் பதிப்பு - 2017 ஆசிரியர் பற்றி : சோம வள்ளியப்பன் புகழ்பெற்ற எழுத்தாளர், எழுத்தாளர், பேச்சாளர், பயிற்சியாளர் மற்றும் மனித வள மேலாண்மை, ஆளுமை மேம்பாடு மற்றும் நிதி முதலீடுகள் ஆகிய துறைகளில் நிபுணர் ஆவார். அவர் சுய வளர்ச்சி, பங்குச் சந்தை, உணர்ச்சி நுண்ணறிவு, நேர மேலாண்மை, விற்பனை, தலைமை மற்றும் ஆளுமை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 50 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது அல்ல அல்ல பனம் என்ற தலைப்பில், 2004 இல் கிழக்கு பதிப்பகத்தாரால் (நியூ ஹொரைசன் மீடியா) வெளியிடப்பட்டது. புத்தகம் பற்றி : மொத்தம் 39 தலைப்புகளும் 216 பக்கங்களும் கொண்ட இந்த புத்தகம் ஐம்பதாயிரம் பிரதிகள் விற்ற “இட்லியாக இருங்கள் - எமோஷனல் இன்டெலிஜென்ஸ்” நூலின் இரண்டாம் பாகம் தான். முதல் தலைப்பான உணர்வால் ஜெயிக்கலாம் என்று தொடங்கி கடைசி தலைப்பு கவனமாக கவினிப்பது வரை ஏக பட்ட தகவல்களும். அதற்கு தகுந்த உதாரணமும் கொடுத்து இருக்கிறார் ஆசிரியர். எடுத்துக்காட்டாக முதல் தலைப்பு உணர்வால் வெல்லலாம் என்ற பகுதியில் துப்பாக்கி திரைப்படத்தின் இறுதி கட்சியை எடுத்துக்காட்டாக சொல்லி புரியவைத்து இருப்பார்.இதே போலவே பல இடங்களிலும் இந்த மாதிரியான உதாரணத்தை காட்டி மக்களுக்கு எளிமையாக புரியும் வகையில் சொல்லி இருப்பார். எனது பார்வை : புத்தகத்தில் பல விஷயங்கள் விருப்பமான ஒன்றாக இருந்தாலும் எனக்கு பிடித்த தலைப்பு 34 முதல் 37 வரை இருக்கும் empathy என்னும் தலைப்பில் சொல்லி இருக்கும் கட்டுரைகள் உண்மையில் சோர்ந்து போய் இருக்கும் மனிதனுக்கு தேவை ஒரு ஆறுதல் கொடுக்கும் வார்த்தைகள் ஆனால் இங்கு ஆறுதலுக்கு பதில் அட்வைஸ் தான் வருகிறது என்று சொல்லி empathy என்றால் என்ன மற்றவர்களின் உணர்வை எப்படி புரிந்துகொள்வது போன்றவற்றை எளிய விளக்கத்துடன் சொல்லி இருப்பார் ஆசிரியர். கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.
Apart from the actual subject of this book “emotional intelligence”. I’m influenced by seeing how critical messages or teachings can be explained in a way simple manner, which a young child can also understand.
Respects to author Soma Valliappan sir.
Meaningful book, recommended for every human being.
This book simply explains what is emotional intelligence and how to use it in practical life. I learned that EM is a most important art everyone should know and implement in their life long. Overall great book highly recommended to read.
Will be an Eye opener for many. I read this book after reading the first part . Unlike other English books the author has discussed simple day to day examples which makes it easier to finish the book.