பல்லவர் வரலாறு என்னும் இவ்வாராய்ச்சி நூல் தமிழகத்திற்குப் புதியமுறையில் தரப்படும் தமிழ் விருந்தாகும், பல்லவரைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் பலவும், கட்டுரைகள் பலவும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. ஆயின், அவற்றிற் காணப்பெறும் செய்திகள் அனைத்தும் நன்கு ஆராய்ந்து தமிழில் இதுகாறும் செம்மையுற எழுதப்படவில்லை. காலஞ் சென்ற வரலாற்றுப் பேராசிரியர் வெளிப்படுத்தினார்கள். அவ் வரலாற்று நூற்குப் பிறகு வெளிப்போந்த ஆராய்ச்சி நூல்கள் பல: சிறந்த கட்டுரைகள் பல; கிடைத்தகல்வெட்டுச்செய்திகள் பல. மேலும், அவ்வரலாற்று நூல் இன்று கிடைக்கு மாறில்லை. வித்துவான் தேர்விற்கு அது பாடமாக வைக்கப் பட்டுள்ளது. நூலின்றி மாணவர் இடர்ப்படுகின்றனர்.