Thriller Based Fiction Written By Rajeshkumar. இந்த சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை கண்டு மனம் கொதித்து, அதை தட்டி கேட்க துணியும் ஒரு பெண்ணிற்கு எந்த வகையான இன்னல்கள் ஏற்படுகின்றன என்பதையும் அதை அவள் எப்படி எதிர் கொண்டு வெற்றி பெறுகிறாள் என்பதையும் ஆசிரியர் தனக்கே உரித்தான பாணியில் எழுதியுள்ளார்.
மற்றவர்களின் தவறை சுட்டிக்காட்டும் போது முதலில் அவர்களின் மீது பகைமை தான் எழும்.
கங்கா தன் தோழிக்கு பார்த்த மாப்பிள்ளை பெண்கள் விஷயத்தில் காதல் மன்னன் என்று தெரிந்த பிறகு உண்மையைச் சொல்லி அத்திருமணத்தைத் தடுத்துவிட்டதால் கோபத்தின் உச்சியில் இருப்பவன் கங்காவை நீலப்படம் எடுக்க ஒரு கேமராமேனை பணத்தாசை காட்டி தூண்டிவிடுகிறான். ஆனால் நல்லவனான அக்கேமரமேன் ஒரு நாடகத்தை நடத்தி அவனின் தவறுகளால் ஏற்படப் போகும் இழப்புகளைக் காட்டும் போது தன் தவறை உணர்ந்து கொள்கிறான்.
கங்கா யாரின் கவிதை வரிகளைப் பார்த்து பூரிப்படைந்து ரசிகையானாளோ அவனையே மணந்து கொள்ளும் முடிவை எடுக்கிறாள்