இந்தியாவைப் பற்றி எதிர் கருத்துக்களால் நிரம்பி இருப்பவர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாத செயல்கள் பக்கம் இழுக்கும் கும்பலை பிடிக்க மாணவி துங்கபத்ரா மூலம் அரசாங்கம் திட்டம் போடுகிறது.
பேச்சுப் போட்டியில் இந்தியாவில் இருக்கும் கெட்டத்தை மட்டும் ஆவேசபட்டியல் போட்ட துங்கபத்ராவை தீவிரவாதி கும்பலில் இணைத்துவிடுகின்றனர்.
பார்லிமெண்ட் வளாகத்தில் எம்பிகளைச் சுட்டுகொள்ளத் திட்டம் போட்ட அத்தீவிரவாத கூட்டத்தின் முக்கியப் புள்ளிகளுடன் டெல்லி வந்துசேர்கிறாள்.
துங்கபத்ரா அரசாங்கத்துடன் கைகோர்த்து போட்ட திட்டம் முழுவெற்றிப் பெறுகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள அத்தீவிரவாதி கூட்டத்தை ஒரே நேரத்தில் கைது செய்கின்றனர்.