குற்றவாளியை விட அவனைப் பிடிக்கப் போகும் ஆட்களின் அறிவு பலமடங்காக இருக்க வேண்டும்.
காட்டில் தீவிரவாதி மொஹிந்தர்கானை தேடி போலீஸ் படையே அலசி ஆராய்ந்து கொண்டிருந்தால் அவன் முன்னாள் முதலமைச்சர் வீட்டில் சுகமாக உட்கார்ந்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றும் ஏற்பாட்டிற்குத் தயார் ஆகிறான்.
தீவிரவாதியை கைக்குள் போட்டு அடுத்தத் தேர்தலில் ஆட்சியில் அமர வேண்டும் என்று போட்ட திட்டத்தை போலீஸ் முறியடித்துவிடுகிறது.
எதிர்பாராமல் இந்தத் தீவிரவாதிகளின் கூட்டத்தில் இருக்கும் ஒருவனைக் காதலித்த பெண் போலீஸ் வளையத்தில் மாட்டியது கூட ஒருவகைப் பலனை அளிக்கிறது.