முற்றிலும் புதிதான ஒரு வடிவத்தில் எழுதப்பட்டு இருக்கும் குறுங்கதைகள். ஒரு வடிவம் என்று கூட சொல்ல முடியாது. பல கதைகளும் வெவேறு வடிவங்களை எடுத்துக்கொள்கின்றன. எந்த ஒரு கதையும் பாரம்பர்யமான முறையில் கதை சொல்லாமல் , ஒரு நிமிடம் வாசகனை சிந்திக்க வைத்து , கதையை உருவாக்க வைக்கிறது.சுவாரசியமான முறையில் பேய் , செக்ஸ் ,காதல் , அமானுஷ்யம் ,மனநிலைகள் கையாளப்பட்டு இருக்கின்றன.சின்னஞ்சிறிதாக நூற்றுக்கணாக்கான கதைகள் இருந்தாலும் , ஒரு கதை கூட இது வரையில் உலகின் எந்த மொழியிலும் கையாளப்பட்டது இல்லை.காட்டருவி போல ஓடிக்கொண்டிருக்கும் கதைகளில் தொலைந்து விடாமல் இருக்க வேண்டியது உங்களின் பொறுப்பு.எவ்வளவுதான் விழுப்புணார்வுடன் படித்தாலும் எந்த நொடியில் கதை எப்பட
கிட்டத்தட்ட பத்துகதைக்கு ஒரு கதை "கதைடா", என்று ஒப்புக்கொள்ளச் செய்கிறது. புதிய வடிவிலான கதைகளும் கதை முயற்சிகளும் அவ்வப்பொழுது "அட" போட வைக்கிறது.
சில நேரங்களில் கதை தான் படிக்கிறோமா, இல்லை பொருள் புரியாத சங்கப் பாடல் அல்லது கோயிலில் தேவபாசையில் பூசாரி கடவுளுடன் பெசிக்கொண்டிருப்பரே, அதைக் கேட்கும் போது "ங்கே" என்று தோணுமே அது போல் இருக்கிறது. பக்கத்தை அல்லது எண்ணிக்கையை அடைவதற்கான முயன்றிருக்கிறாரோ திரு. அராத்து என்று எண்ணுகிறேன்.
போகன் சங்கரின் "போக புத்தகம்" என்ற சிறுகதைத் தொகுப்பும் இது போல் தான் இருக்கிறது.
This entire review has been hidden because of spoilers.