உயிலின்படி சொத்துக்கள் தன் மகனுக்குப் பிறக்க போகும் குழந்தைக்குத் தான் சேரும் என்று இருப்பதால் வருண் காதலிக்கும் பெண்ணை மருத்துவத்திற்கு உட்படுத்துகிறார் விஸ்வேஸ்வரன்.
மருத்துவ அறிக்கைப்படி சௌந்தரியாவிற்குக் குழந்தை பிறக்காது என்றாலும் டாக்டர் சௌந்தரியாவின் தந்தையிடம் படித்த மாணவி என்பதால் பொய்யான அறிக்கை கொடுத்துவிடுகிறார்.
உண்மை தெரிந்து விஸ்வேஸ்வரன் கல்யாணத்தை நிறுத்த முற்படும் போது தான் தகப்பனாகும் தகுதியை இரண்டு மாதங்களுக்கு முன்பு இழந்துவிட்டதை வருண் சொல்லி அவரின் புத்தியை மாற்றுகிறான்.