அற்புத மரி, பள்ளியிலேயே ஒழுக்கங்கெட்டுப்போய் திரியும் மாணவி என்று தலைமை ஆசிரியர் எப்பொழுதும் வசைபாடியே வாழ்க்கையை ஓட்டி வந்தார். அவளது வளர்ப்பு, வாழ்க்கை, நடவடிக்கை, உடல் என எல்லாமே விமர்சனத்திற்கு உரிய தலைப்பாகிறது. தமிழ் ஆசிரியர் மட்டும் இந்த குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்து, சுமதி டீச்சரை அழைத்துச் சென்றார் மரியின் வீட்டிற்கு. அங்கு நுழைந்ததுமே அவருக்கு பல விஷயங்கள் புரிய வருகிறது.
நாம் என்ன செய்கின்றோம்? ஒருவரின் சுபாவத்தை சுலபமாக எடை போடுகிறோம். அவர் அப்படித்தான், இவள் இதுதான், இவளை திருத்த முடியாது, அவனோ ஓர் ஊதாரி. இதையெல்லாம் சொல்ல நாம் என்ன புத்தரா இல்லை இயேசுவா? நாமோ, மனிதர்களாக வாழும் அர்ப பதர். நாம் சரியாக இருக்கிறோமா என்பதை அறிவதே நமக்கு அழகு.
பிரபஞ்சனின் இக்கதை, அடுத்தவரிடம் குற்றச்சாட்டுகளை வைக்காமல், கனிவோடு நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
'அரி என்கிற ஆட்டுக்குட்டி' என்னை நிறையவே சிந்திக்க வைத்தது விட்டது. நீங்களும் படித்து மகிழுங்கள்.