Jump to ratings and reviews
Rate this book

மரி என்கிற ஆட்டுக்குட்டி

Rate this book
மரியை எனக்குத் தெரியும் அன்புக்கு ஏங்கிய ஆத்மா அவள் வசதியான குடும்பம் தெருவில் மூன்று காரிகள் நின்றன நான்கு வேலைக்காரர்கள் இருந்தார்கள் வீட்டில் அம்மா இல்லை அதாவது குழந்தையிடம் இல்லை அப்பா பணம் பண்ணிக்கொண்டிருந்தார் அம்மாவும் அப்பாவும் தன்னைப் புறக்கணிக்கிறார்கள் என்று மரி நினைத்தாள் அவள் உலகை வெறுக்கத் தொடங்கினாள். குழந்தைகள் பெற்றோர்களிடம் ஆசிரியர்களிடம் உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான் அது மட்டும்தான் அதைக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு மனிதர்கள் மரத்துப் போய்விட்டார்கள் என்பது நம் காலத்து அவலம்.

208 pages, Paperback

Published January 1, 2014

3 people are currently reading
53 people want to read

About the author

பிரபஞ்சன்

64 books60 followers
Prapanchan (Tamil: பிரபஞ்சன்), is the pseudonym of S. Vaidyalingam (Tamil: சாரங்கபாணி வைத்தியலிங்கம்) a Tamil, writer and critic from Puducherry, India.

He started his career as a Tamil teacher in Thanjavur. He also worked as a journalist in Kumudam, Ananda Vikatan and Kungumam. In 1961, he published his first short story Enna ulagamada in the magazine Bharani. He was influenced by the Self-Respect Movement. He had published 46 books. In 1995, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his historical novel Vaanam Vasappadum (lit. The Sky will be ours) set in the times of Ananda Ranga Pillai. His works have been translated into Hindi, Telugu, Kannada, German, French, English and Swedish. His play Muttai is part of the curriculum in Delhi University and his short story collection Netrru Manidhargal is a textbook in many colleges.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
28 (50%)
4 stars
20 (36%)
3 stars
7 (12%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Priyadharsini Palani.
50 reviews9 followers
May 9, 2022
அழகிய தமிழ், அங்கத நடை, அளவான பாத்திரப் படைப்பு, மனித உணர்வுகளை நுணுக்கமாக ஆராயும் தன்மை, இது எல்லாம் தான் இந்த கதை ஆசிரியரின் சிறப்பு. இந்த பிரபஞ்சமே அன்பினால் தான் இயங்குகிறது என்று ஆணித்தனமாய் எடுத்து வைக்கும் பிரபஞ்சன் எழுதிய மரி என்னும் ஆட்டுக்குட்டியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். காலம் தன் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை ஒரு பெண் உடைக்கும் போது அவள் சந்திக்கும் நிராகரிப்பு, அவள் இயல்பை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்பதை இந்த கதை சொல்லும். சிந்தனைகளில் வக்கிரத்தை வைத்துக் கொண்டு வெளியில் தான் ஒரு கலாச்சார சீர்த்திருத்தவாதி என்று சிலர் காட்டிக் கொள்வார்கள். அவர்களின் கன்னங்களில் ஓங்கி அறைவது போல் இருக்கும் இந்த கதை. இந்த கதை தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்த ஒன்று. நாம் சில மனிதர்களை சுலபமாக எடை போட்டு விடுகிறோம். ஒருவரின் சுபாவத்தை நாம் காணும் கண்ணோட்டத்தில் முடிவு செய்து விடுகிறோம். இந்த கதை ஒரு மனிதனின் புறத்தோற்றத்தை தாண்டி அக அழகையும் காண சொல்லித் தருகிறது.

"Everyone is fighting a battle you know nothing about" .Be Kind Always!
Profile Image for Selva Ganesh.
2 reviews1 follower
January 8, 2023
திரு. பிரபஞ்சன் அவர்களின் படைப்பான 'மரி என்கிற ஆட்டுக்குட்டி', நான் படிக்கும் முதல் புத்தகமாகும்.

இதன் தலைப்பை கண்டு, இப்புத்தகத்தின் பின்புறத்தை காணதவரை, இது ஒரு ஆட்டுக்குட்டியின் கதையாக தான் இருக்கும் என்று எண்ணி இதை நம் மனம் தேர்ந்தெடுக்கும்.

பின்பு வாசிப்பை தூண்டும் விதமாக இதன் பின்புறம் அமைந்து, நம்மை மேலும் ஆசிரியரின் எழுத்துக்கள் அன்புக்கு ஏங்கும் ' மரி ' யாரென தெரிந்துகொள்ள நம்மை இழுத்துச் செல்லும்.

நன்றி,

By
@Yeano_Thano_Ezhuthu.
Profile Image for Aishwarya.
79 reviews5 followers
July 31, 2022
அற்புத மரி, பள்ளியிலேயே ஒழுக்கங்கெட்டுப்போய் திரியும் மாணவி என்று தலைமை ஆசிரியர் எப்பொழுதும் வசைபாடியே வாழ்க்கையை ஓட்டி வந்தார். அவளது வளர்ப்பு, வாழ்க்கை, நடவடிக்கை, உடல் என எல்லாமே விமர்சனத்திற்கு உரிய தலைப்பாகிறது. தமிழ் ஆசிரியர் மட்டும் இந்த‌ குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்து, சுமதி டீச்சரை அழைத்துச் சென்றார் மரியின் வீட்டிற்கு. அங்கு நுழைந்ததுமே அவருக்கு பல விஷயங்கள் புரிய வருகிறது.

நாம் என்ன செய்கின்றோம்? ஒருவரின் சுபாவத்தை சுலபமாக எடை போடுகிறோம். அவர் அப்படித்தான், இவள் இதுதான், இவளை திருத்த‌ முடியாது, அவனோ ஓர் ஊதாரி. இதையெல்லாம் சொல்ல நாம் என்ன புத்தரா இல்லை இயேசுவா? நாமோ, மனிதர்களாக வாழும் அர்ப பதர். நாம் சரியாக இருக்கிறோமா என்பதை அறிவதே நமக்கு அழகு.

பிரபஞ்சனின் இக்கதை, அடுத்தவரிடம் குற்றச்சாட்டுகளை வைக்காமல், கனிவோடு நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

'அரி என்கிற ஆட்டுக்குட்டி' என்னை நிறையவே சிந்திக்க வைத்தது விட்டது. நீங்களும் படித்து மகிழுங்கள்.
Profile Image for Naveen Kumar.
189 reviews9 followers
July 25, 2022
One of the best short stories I had ever read. Made me cry
Profile Image for Parthasarathy Rengaraj.
72 reviews1 follower
February 4, 2023
It’s more of thought and reflections of own self , very good narrative, engaging

Addictive

Will read more prabanjan, no doubt
38 reviews
August 7, 2023
அருமையான தொகுப்பு. மயிலிறகால் வருடும் வாஞ்சை. என்னை மிகவும் ஈர்த்த 5 சிறுகதைகள்:
1. அந்த மனிதர்
2. வாசனை
3. அபஸ்வரம்
4. அப்பாவுக்கு தெரியும்
5. அமரத்துவம்
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.