வாழ்க்கைப் போடும் முடிச்சுக்களைக் கடைசி நேரம் வரை புரிந்து கொள்ள முயன்று புரியாமல் அதன் போக்கில் ஒப்புக் கொடுப்பதும் எதார்த்த நிலையே.
புத்தகக் கண்காட்சியில் தன் மீது மோதி காணாமல் போனவளைத் தான் இவ்வளவு நாட்கள் கனவில் சந்தித்து இருக்கோம் என்பதைத் தெரிந்து அவளைத் தேடும் ஆனந்த இனியனின் கண்ணில் அகப்படாமல் போகிறாள் நித்யவர்ஷினி.
கடலூரை மழைப் புரட்டி போட அங்கே வந்த மருத்துவக்குழுவில் நித்யவர்ஷினியும் ஒரு டாக்டர் என்பதைக் கண்டவன் கண்ணாலே காதலை உணர்த்திவிடுகிறான். மக்களுக்காக “கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி” உதவி செய்யும் இளம் தொழிலதிபரான ஆனந்த இனியனின் காதலை நித்யவர்ஷினியை ஏற்க முடியாமல் தடுப்பது அவளுக்கு ஏற்கனவே மாமனுடனான நிச்சயம் தான்.
மாமனை இழந்த பிறகு அக்கா குடும்பத்தைக் கவனித்த நல்உள்ளத்தைக் கொண்ட சேகர் அக்கா மகளின் காதலை அறிந்து நித்யவர்ஷினியை ஆனந்த இனியனிடம் சேர்த்து வைத்துத் தன்னைக் காதலிக்கும் நித்யாவின் தோழியான மலர்விழியைத் திருமணம் செய்து கொள்கிறான்.