சூழ்நிலைகளே மனிதர்களை ஆட்டுவிக்கிறது என்றாலும் அந்த சூழ்நிலையை உண்டாக்குவதில் மனிதர்களின் பங்கே அதிகம்.
வேலையை முன்னிட்டு வெளிநாட்டுக்கு செல்ல வேண்டி இருப்பதால் வயதான தாயை பார்த்துக் கொள்ள ப்ரத்யுஷாவை மணந்து கொள்கிறான் ஆதர்ஷ்.
நான்கு வருடத்தில் திரும்பி வருவேன் அதன் பிறகு கணவன் மனைவி உறவுக்குத் தயார் ஆகலாம் என்று ஆதர்ஷ் கிளம்பி போக முதலில் சுமூகமாக ஆரம்பித்த மாமியார் மருமகள் பேச்சுகள் நாள்பட வெறுப்பில் ப்ரத்யுஷாவின் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வரை செல்கிறது.
போனிலே குடும்பம் நடத்திய தம்பதிகள் மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒன்று சேரலாம் என்று பார்த்தால் உறவினர்கள் உண்டாக்கும் பிரச்சனைகளால் கோபங்கள் அதிகரித்து மனஉளைச்சல்கள் உச்சம் பெற்ற பிறகே ஒருவழியாக அனைத்தும் சாதக நிலை நோக்கி செல்கிறது.
மற்றவர்களுக்காக என்று பார்த்து பார்த்துத் தன்னைக் கவனிக்க மறந்த ப்ரத்யுஷாவிற்கு உடல் ஓர் அலாரத்தைக் கொடுத்த பிறகே அவளை சார்ந்தவர்களுக்கு முழிப்பு ஏற்படுகிறது.