நெருக்கடியான நேரங்களில் அதிலிருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையே வலுசேர்த்துத் துன்பத்தில் துவள விடாமல் தடுக்கும்.
தந்தை இறந்த பிறகு சித்தியின் கொடுமைகளை அனுபவிக்கும் மானஸா பொறுத்துப் போனாலும் தன்னை அந்தத் தொகுதி எம்எல்ஏ மகனுக்குத் திருமணம் செய்யப்போவதை அறிந்து அதைத் தடுத்து நிறுத்த சென்னையில் இருந்து காஷ்மீருக்கு பயணப்படுகிறாள்.
ஆசிரியர் வேலையில் இருக்கும் மானஸா பேப்பரில் வந்த கேர் டேக்கர் விளம்பரத்தை பார்த்து எதையும் விசாரிக்காமல் வெறும் ஐநூறு ரூபாயுடன் சென்னையில் இருந்து காஷ்மீர் வந்து சேர்கிறாள்.
மனைவியை இழந்த பிறகு வெறுமையில் இருக்கும் அஸ்வினின் தந்தையைப் பார்த்துக் கொள்ள வந்த மானஸா தன் தம்பியுடன் சுலபமாகப் பழகி தன்னை ஒதுக்குகிறாளோ என்று கோபப்பட்டு அவளை வார்த்தைகளால் காயப்படுத்திக் கொண்டே காதலிக்கும் அஸ்வினின் காதலில் தன்னைத் தொலைத்துப்போகிறாள் அக்காதலி.
கேப்டனாக இருக்கும் அஸ்வின் மனதில் பெண்கள் மீதான தவறான எண்ணங்களே அதிகம் இருப்பதால் மானஸாவையும் நம்பாமல் இருப்பவனைத் தன் குணத்தால் மாற்றியமைப்பவள் அவனுக்கான வாழ்வில் தன்னையும் பிணைத்துக் கொள்கிறாள்.