கவிதைக்காகவே உற்பத்தி செய்யப்படும் கவித்துவத் தருணங்களைப் பிடிவாதமாக உதறி மேலெழுபவை முகுந்த் நாகராஜன் கவிதைகள். ஒரு கவிஞனின் தேர்வில் வராத வாழ்வின் எளிய தருணங்களைத் தேடித் தேடிக் கண்டடைந்து அவற்றைத் தன் சூட்சுமமான மனதின் ரசவாதத்தால் கவித்துவ தருணங்களாக மாற்றுகிறார். தனக்கென ஒரு புதிய மொழியைக் கண்டடைபவனே அசலான கவிஞன் எனில, கடந்த பத்தாண்டுகளில் சுயமான கவிஞனாக முகுந்த் நாகராஜன் அறியப்படுகிறார்.
மிகவும் எளிமையான தருணங்களையும் சில நெகிழ்வான தருணங்களையும் கவிதையாக்கியிருக்கிறார். பொருத்தமான தலைப்பையும் வைத்திருக்கிறார். சில கவிதைகள் எனக்கு புரியவில்லை என்றாலும் இவருடைய புதுமையான பாணி என்னைக் கவர்ந்தது