வானத்தில் கோலமிட்டு ::::::: ************ சுயநலத்தால் அடுத்தவர்களின் வாழ்வில் விளையாடியவர்களுக்குத் தன் தவறை உணர காலம் வழிவகுக்கும்.
தான் காதலித்தவன் ஏழை என்று தெளிவு லேட்டாக உணர்ந்த வைஷ்ணவி அவனைப் பொய்யான குற்றசாட்டில் தண்டனை வாங்கி கொடுக்கிறாள்.
அப்பா பார்த்து வைத்த துபாய் மாப்பிள்ளையைக் கட்டி சில நாட்கள் இனிமையாகக் கழிந்த பின் தன் முதலாளிக்கு அவளை விட்டு கொடுத்தவன் சொல்லும் காரணத்தால் உடைந்து போனவள் இந்தியாவிற்குத் தப்பித்து வந்தவளுக்குக் காதலன் தற்கொலை செய்து கொண்டான் என்ற தகவல் மனதை தடுமாற வைக்கிறது.
தான் செய்த தவறுக்கு மனநிலை பாதிக்கப்பட்டவளாக மருத்துவனையில் காலம் தள்ளும் முடிவை எடுத்துவிடுகிறாள்.
புனிதா ஒரு புதிர் :::::::::::: *********** தன் தாயை போல் உருவ ஒற்றுமை கொண்ட பெண்ணைப் பார்த்து அதிர்ச்சி அடையும் ஜெயகுமார் அவளின் பிறப்பு ரகசித்தை தேடி அலைந்தாலும் உண்மை பிடிபடவில்லை.
ஜெயகுமாரின் தாய் பெண்குழந்தையைப் பெற்றெடுத்த அதே நேரத்தில் பக்கத்து பெட்டில் இருந்த பெண்ணுக்கு இறந்தே குழந்தை பிறந்ததால் இந்தக் குழந்தை அங்கே மாற்றப்படுகிறது.குழந்தையை எடுத்துச் சென்றவர்கள் இறந்து போனதால் ஆசிரமத்தில் புனிதா வளரவேண்டிய சூழல், ஒரு கலைநிகழ்ச்சியில் தன்னைப் போலவே இருக்கும் குழந்தை புனிதாவை பார்த்த ஜெயகுமாரின் தாய் அவளுக்கு ஸ்பான்சர் செய்கிறார் தன்னுடைய ரத்தம் தான் அது என்று தெரியாமலே.
புனிதாவை காதலித்துத் திருமணம் செய்யப்போகும் ஜவஹரால் உண்மைகள் வெளிவந்து விடுகிறது.