அதே காதல், அதிரடியாக முட்டி மோதிக்கொள்ளும் நட்புக்குள் மென்னடை போட்டு நுழைந்தால்?
காணும் நேரமெல்லாம் முட்டிக்கொள்ளும் எதிரெதிர் துருவங்களான இருவருக்குள்ளும் நுழைந்த காதல் அவர்களை என்னவெல்லாம் செய்கிறது என்பதையும்,
கண்டதும் ஆழ்மனதில் அழுந்த வித்திட்டாலும், அதீத உரிமையுணர்வும் கோபமும், கலந்து பேசாத பொறுமையின்மையும் குறுக்கிட்டால் அந்த அழகிய காதல் வித்தும் ஆட்டம் காணலாம் என்பதுக்கு எடுத்துக்காட்டாக இருவருமாக,
ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பும் கலகலப்புமாக நகரும் இக்கதை உங்களையும் தன் பயணத்தில் அரவணைத்துக் கொள்ளும் எனும் மிகையான நம்பிக்கையுடன் உள்ளேன்
ஒவ்வொரு மனிதனும் மற்றவர்களிடம் காட்டும் முகம் வேறு அவனுள் இருக்கும் உண்மை முகம் வேறு,அந்த நுணுக்கத்தைக் கண்டறிந்து உணர்ந்தவர்களால் மட்டுமே ஆத்மார்த்த உறவுகளின் பிடியில் விருப்பத்துடன் கட்டுப்பட இயலும்.
சிறுவயதில் இருந்து ஏட்டிக்கு போட்டியா எந்நேரமும் சண்டையில் இருக்கும் வருண், அகல்யா இருவரும் வீட்டு பெரியவர்களின் விருப்படியே காதலில் கரைந்து போகின்றனர்.
உறவுகளில் முன்னுரிமையை எப்பொழுதும் எதிர்பார்க்கும் ராகவன் தான் விரும்பி மணக்க போகும் அனுவிடமும் அதையே கடைபிடிக்க அவளின் மாறுபட்ட வாழ்க்கை சூழலில் உண்டான தடுமாற்றம் இருவருக்கும் வார்த்தைகளைக் கடினப்படுத்தியதால் பிரிவு என்ற சொல்லில் இருக்கும் அழுத்தத்தை உணர்ந்து கொள்கின்றனர்.
நேர்மறை எண்ணங்களுடன் கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ஒருவருக்கொருவர் அன்பை மட்டுமே வெளிப்படுத்தி அதன் மூலம் ஒரே பிணைப்பை உண்டாக்கி கொள்கின்றனர்.
வெவ்வேறு குணங்களைக் கொண்ட அக்கா தங்கையான அனு மற்றும் அகல்யாவின் வாழ்வு அவர்களைப் புரிந்து கொண்டவர்களை மணந்ததால் சிறப்பித்துப் போகிறது.
I always love her breezy style of writing. In this story, she has come out of her comfortable zone I would say. A sweet, funny and decent love story from the author