கருத்து வேறுபாடுகளால் எழும் சண்டைகள் மூலமே புதுமணத் தம்பதிகள் புரிதலை அடைகின்றனர்.
பெற்றவர்கள் பார்த்து வைத்த திருமணபந்தத்தில் நுழையும் நிவேதிதாவிற்கு அனைத்தும் சமஅளவிலே நடந்து மனநிறைவு கொடுக்கிறது.
நாடுவிட்டு நாடு வந்து தனித்துத் தன் துணையுடன் இனிமையாகப் பொழுதை கழிப்பவளுக்கு அவளின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தி பெரும் தாக்கத்தைக் கொடுக்கும் என்பதால் கணவன் அத்தகவலை மறைத்துவிட்டதால் முழுகோபமும் அவனின் மீது எழுகிறது.
தந்தையைக் காண இந்தியா வந்த நிவேதிதாவிற்கு அவளின் தவறு புரிய தொடங்குகிறது, மனைவியின் கோபத்திற்கு மதிப்பு கொடுத்து தள்ளி இருந்த கணவன் மீது பெருங்காதல் எழுந்த பிறகு மீண்டும் அவனைச் சந்திக்கும் சந்திப்பு அத்தம்பதிகளின் உறவை இறுக வைக்கிறது.