குற்றவாளிகளை அவர்களின் போக்கிலே சென்று சந்தேகம் வராத அளவிற்கு நடித்து ஏமாற்றுவதில் பெரும் சிக்கல் அடங்கியிருக்கிறது.
தீவிரவாதியான அருணாவை சாட்சிகளுடன் பிடிக்க அவளுக்கு அறிமுகமான விஷ்வாவை போலீஸ் உபயோகப்படுத்தி அவளிடம் காதலை சொல்ல வைக்கிறது.
விஷ்வாவின் மனைவியைக் கொன்றால் மட்டுமே அருணாவின் திட்டம் நிறைவேறும் என்ற கோட்டில் அவளை நிறுத்தும் போது தன் தீவிரவாத கும்பலில் இருந்து வெளிக்கொண்டு வந்த ஆளால் காட்சிகள் முற்றிலும் மாறுபட்டு பல நாட்டு தீவிரவாத குடும்பலுக்குத் துணை போகும் அப்பாவுடன் சட்டத்தின் முன் அகப்பட்டுப் போகிறாள்.
பணக்கார மருமகள் தான் வேண்டும் என்று ஆசைப்பட்ட விஷ்வாவின் தாயின் முடிவிலும் நடந்த நிகழ்வுகளால் மாற்றம் ஏற்படுகிறது