ஆண்களின் தவறுகளுக்குப் பெண்களே பலியாகி தன் வாழ்க்கையை இழந்து தீரா துன்பத்தில் ஆட்படுகின்றனர்.
காதல் மன்னனாக இருக்கும் ராகவன் இத்தாலியில் ஆடிய விளையாட்டில் ரோசாலியா தேவி உருக்கொண்டு பிறந்து அவரைப் பிற்காலத்தில் ஆட்டி வைக்கிறாள்.மகன் ராகவனின் குணத்தைத் தெரிந்த அவனின் அன்னை பேரன் கார்த்திக்கை ஒழுக்கமாக வளர்க்க தன் கட்டுப்பாட்டிலே அவனை வைத்துக் கொள்வதுடன் சொத்துக்கள் மீதான உரிமை அனைத்தும் பேரனின் வசமே விட்டு வைக்கிறார்.
ராகவனால் தான் தன் தம்பியையும் தாயையும் இழந்தேன் என்ற எண்ணம் ரோசாலியாவின் ஆழ்மனதில் பதிந்து போய் மனிதர்களிடம் இருந்து தள்ளியே இருப்பவளை மலர் வேந்தன் கவர்ந்து விடுகிறான்.
பொருளாதார ரீதியாக இருக்கும் ஏற்ற தாழ்வுகளைக் கொண்டு தள்ளி போகும் மலர் வேந்தனை மிரட்டி கணவன் பதவியைக் கொடுத்தவள் அவனுள் காதலையும் தூவி விடுகிறாள்.
எப்பவும் பாட்டுப் பாடிக்கொண்டு இருக்கும் மலர்வேந்தனின் தாய் கதாபாத்திரம் அழுத்தங்களையும் சாதாரணமாக்கிவிடுகிறது.
ரோசாலியா தேவியின் அண்ணனாக வரும் கார்த்திக் மற்றவர்கள் சொல்லும் சொல்லுக்கே தன்னை அர்பணித்துக் கொண்டு அவர்கள் இழுக்கும் பக்கம் எல்லாம் புலம்பிக் கொண்டே சென்றாலும் இக்கதையில் அவன் தான் மையமாகிறான்.
Lovely story ஒரு அழகான குடும்ப நாவல் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் அருமை யாக நகைச்சுவை உணர்வுடன் எழுதியிருக்கிறார் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் வாழ்த்துக்கள் நிஷா சிஸ்💐
Fantastic terrific wonderful writing. From start to end not a single dull moment. This writer is just impressive. I became a fan of her writing in just four stories. There is no better relaxation than this story. Laugh medicine.