Jump to ratings and reviews
Rate this book

Chinna Chinna Katturaigal / சின்னச் சின்னக் கட்டுரைகள் (150.0)

Rate this book
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். டெக்னாலஜி பற்றி எழுதுவது சுலபம். ஆனால் புரியும் வகையில் எழுதுவது எல்லோருக்கும் சாத்திய மில்லை . சுஜாதா அதை சர்வசாதாரணமாக சாத்தியப் படுத்தியிருக்கிறார். கணினித் தமிழ் குறித்தும் தமிழ் இணையம் குறித்தும் அவருடைய கனவுகளும் எதிர்பார்ப்புகளும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. காரணம், அவற்றில் பெரும்பாலானவை இன்று செயல்வடிவம் பெற்று விட்டன. இதுதான் சுஜாதாவின் பலம். டெல்லி, நியூயார்க், கவிதை, சினிமா, இசை என்று ரசிகர்களின் உள்ளம் தொட்ட பல கட்டுரைகளின் அணிவகுப்பே இந்தப் புத்தகம்.

136 pages, Paperback

First published January 1, 1987

34 people are currently reading
97 people want to read

About the author

Sujatha

303 books1,371 followers
Sujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.

As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
16 (38%)
4 stars
21 (50%)
3 stars
3 (7%)
2 stars
1 (2%)
1 star
1 (2%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Vaideki Thayumanavan.
63 reviews
August 26, 2025
அது என்னவோ தெரியவில்லை சுஜாதாவின் நாவல்களை விட அவரின் கட்டுரைகளே என்னை அதிகம் ஈர்க்கின்றன . ஒரு அனுபவமிக்க அறிவான நண்பர் நம்முடன் தேநீர் அருந்திக்கொண்டே தன் அனுபவங்களையெல்லாம் நம்மிடம் பகிரும்போது என்ன உணர்வு கிடைக்குமோ அதே உணர்வை எனக்கு அளிப்பது அவரின் கட்டுரைகளே.
இக்கட்டுரைத் தொகுப்பும் அதே உணர்வை அளித்தது.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தைச் சுற்றிய அவரின் சிறு வயது நினைவுகள், டெல்லியில் அவருக்குக் கிடைத்த வாழ்க்கை அனுபவங்கள், தன் நியூயார்க், கனடா பயணங்கள் அங்கு அவர் சந்தித்த மனிதர்கள் என சுவாரஸ்யம் ததும்ப பகிர்கிறார்.

பல வெற்றி படங்களின் திரைக்கதை எழுத்தாளராக இருந்த சுஜாதாவின் சினிமா ரசனையை இத்தொகுப்பிலுள்ள சில கட்டுரைகள் வழியாக அறியலாம். சுஜாதா சினிமாவை அணுகும் முறையில் அவரின் ஆழ்ந்த சிந்தனை வெளிப்படுகிறது. நிறைய திரைப்படங்களை பற்றி சுஜாதா இத்தொகுப்பில் பேசியிருந்தாலும் என் ஆர்வத்தைத் தூண்டிய இரு திரைப்படங்கள் 'அமேடியஸ்' மற்றும் 'அவுட் ஆப் ஆப்பிரிக்கா'.

80களில் வெளிவந்த விக்ரம் படத்தில் அவர் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்வதற்காக ஒரு தனி கட்டுரையையே ஒதுக்கி இருக்கிறார். 'ஒரு படம் உருவான கதை' எனும் நீண்ட கட்டுரை அது. அக்காலகட்டத்தில் சினிமாவை வெறும் காசாக இல்லாமல் கலையாக அணுகியிருப்பதற்கு சுஜாதா, கமல்ஹாசன், இயக்குனர் ராஜசேகர் ஆகியோர் கதை விவாதங்களுக்காக எடுத்துக்கொண்ட நாட்களே சாட்சியாக இருக்கிறது. அப்போதிருந்த தொழில்நுட்பத்தை தன் விக்ரமில் பயன்படுத்த முற்பட்ட கமல்ஹாசனின் முயற்சியினையும் மற்றும் கமல்ஹாசன் தன் ஒவ்வொரு படங்களையும் ஒரு சோதனையாக எடுத்துப் பணிபுரிவதை வியக்கிறார் சுஜாதா. இப்போது சுஜாதா இருந்திருந்தால் கமல்ஹாசனின் Thug life போன்ற சோதனைகளையும் கண்டு வியந்திருப்பார். கூடவே, "இது என்னடா சினிமா ரசிகர்களுக்கு இப்படி ஒரு சத்திய சோதனை என்று" அவர் பாணியில் வருத்தமும் தெரிவித்திருப்பதார்.


இத்தொகுப்பில் நான் மிகவும் ரசித்த கட்டுரை 'சின்ன சின்ன பாவங்கள்'. தன் வாழ்க்கையில் செய்த சின்ன சின்ன பாவங்களை பட்டியலிட்டு பாட்டாகவே அமைத்து தெய்வத்திடம் மன்னிப்பு கோரியிருப்பார் சுஜாதா. அவர் செய்த ஒரு சிறு பாவம்: அவர் "மனையாள் காத்திருக்க மாடியிலே தனியாக (அவர்) சங்கீதம் கேட்டது". அந்த வரிகளை வாசிக்கும்பொழுது சுஜாதா அவர்களின் மனைவியின் சமீபத்திய பேட்டிதான் என் கண்களில் வந்துபோனது!
Profile Image for Prabhu R..
Author 3 books34 followers
October 23, 2022
A wonderful collection of articles/essays written about 30-50 years back (1970-90) on a wide-range of topics including science, technology, computers, movies, politics, travel, international affairs, writing, stories and a lot more. Proves how multi-faceted an author Sujatha was.
Profile Image for Dineshsanth S.
192 reviews42 followers
September 21, 2015
என்னவோ தெரியவில்லை சுஜாதாவின் கட்டுரைகளில் எனக்கு ரொம்பப் பிரியம். சுஜாதா எளிய மொழி நடையில் நிறைய விஷயங்களை அலசுவதும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத விடயங்களை குழப்பமேற்படா வண்ணம் கட்டுரைகளில் இணைத்து கையாள்வதும் என்னை அதிகம் கவர்ந்தன.இந்நூலிலும் வாசகர்களை ஏமாற்றாத வகையில் பெரும்பாலான கட்டுரைகளை மிகவும் சுவாரசியமாக எழுதியிருக்கிறார் சுஜாதா.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.