குறிப்புரை..... கதைகளின் நிகழ்வுகள் உண்மையானவை['காதலுக்கு ஒரு கும்பிடு' மட்டும் விதிவிலக்கு]. இவற்றிற்குக் கதை வடிவம் தரும்போது, ஆகச் சிறந்த வர்ணனைகளும், வாசகரின் மனம் கவரும் உரையாடல்களும், கதையைத் தொய்வில்லாமல் கொண்டுசெல்லும் உத்திகளும் தவிர்க்க இயலாதவை. கதைகளுக்குக் கிஞ்சித்தும் தொடர்பற்ற சம்பவச் சேர்க்கைகளை அறவே தவிர்த்திருக்கிறேன். வாசியுங்கள். உங்களின் மனம் திறந்த விமர்சனங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 12 கதைகளில் என் சுய அனுபவக் கதைகள் மூன்று. ஏனையவை, மானுடச் சொந்தங்களின் கதைகளாகும்.