முகமது நபியை பற்றியான ஒரு கேலிச்சித்திரத்தை டென்மார்க் பத்திரிகை வெளியிட்ட உடனேயே, உலகம் முழுவதிலுமிருக்கும் இஸ்லாமிய தரப்புகளிடமிருந்து வலுவான எதிர்வினைகள் கிளம்பியது. அதேபோல், காந்தியைப்பற்றி ஓர் அமெரிக்க நூலாசிரியர் எழுதிய கீழ்த்தரமான அவதூறுநூல் பற்றி இணையப்பேச்சில் பேசிக்கொண்டிருந்தபோது ஓர் இஸ்லாமிய நண்பர் சொன்னார், “இப்போது புரிகிறதா, முகமது நபியைப் பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு ஏன் அப்படி எதிர்வினையாற்றினோம் என்று? இந்த அமெரிக்க அற்பர்களுக்கு நாங்கள் சொல்லும் மொழி மட்டும்தான் புரியும். ஜனநாயகம், கருத்துரிமை என்ற பேரில் அவர்கள் செய்வதெல்லாம் மற்ற பண்பாடுகளின் விழுமியங்களை அழிப்பதை மட்டும்தான். இதை கருத்தாடல் என்றே கொள்ளமுடியாது.
காந்தியின் சிந்தனைகளை பலகோணங்களில் பேசுவதற்குரிய எல்லா வாய்ப்புகளையும் இந்த அவதூறுகள் இல்லாமல் செய்கின்றன. அவதூறுகளை விளக்கிக்கொண்டிருப்பதற்கே நேரம் செலவாகிவிடும். இப்படி தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான அவதூறுக்குரல்கள் வழியாக அந்த ஆளுமையையே சொற்களால் ஆன குப்பைக்குள் போட்டு மறைத்துவிடுவார்கள். நபியை அப்படிச்செய்ய நாங்கள் விடமாட்டோம்…”
உண்மைதான் என்று தோன்றுகிறது. காந்திக்கு எதிராக இந்தியாவிலும் வெளியிலும் அவதூறுகளை எழுதிக்குவிப்பவர்கள் அடிப்படைத் தகவல்களைப்பற்றியோ , குறைந்தபட்ச தர்க்கஒழுங்கைப்பற்றியோ அல்லது சாதாரண அறவுணர்ச்சியைப் பற்றியோகூட கவலைப்படுவதில்லை.
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
உலகில் எந்த ஒரு மக்கள் தலைவரும் அடையாத அவதூறுகளை , வசைகளை, கேலிகளை காந்தி அடைகிறார் மலை மலையா காந்திக்கு எதிராக எழுதியும் பேசியும் குவிக்கப்படுகிறது. ஏன் இது ? ஏன் சர்வசாதாரணமாக காந்திக்கு எதிராக ஒருவர் எழுகிறார் ? என்ற கேள்விக்கு விடையும் காந்தியை ஓரளவு புரிந்து கொள்ள இந்த நூல் உதவுகிறது. நினைக்கும் தோறும் நம் அறத்தை நம் சமநிலையை இது சரிதானா என்ற கேள்வி நம் மனதில் எழுப்புகிறது ஆகவே அந்த நீதி உணர்ச்சிகள் மீது ஒரு பிடி மண்ணை அள்ளி போடுகிறோம் . அவரை புறக்கணிக்க செய்கிறோம் வசை பாடுகிறோம். இன்றைய உலகில் தொழில்நுட்பம் பெருந்தொழில்களை உருவாக்குகிறது. பெருந்தொழில் பெரும் லாபவெறியை உருவாக்கு கிறது. லாபவெறி மிதமிஞ்சிய நுகர்வை கட்டி எழுப்புகிறது. மிதமிஞ்சிய நுகர்வு இயற்கையை அழித்து மனிதனை அழிவுக்குக் கொண்டு செல்கிறது என்று காந்தி சொல்கிறார் ஆனால் இவை இல்லாமல் இன்று வாழ்வே இல்லை..
என நவீன முதலாளித்துவம் முழங்கிக் கொண்டிருக்கிறது. அதன் நடுவே நின்று கொண்டு நாம் காந்தியைப் பார்க்கிறோம். அவர் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் எங்கோ இருப்பவர் போலத் தோன்றுகிறது.
சுபாஷ் சந்திரபோஸ் இராணுவத்திற்கு பயந்து கொண்டு தான் பிரிட்டிஷ் அரசு சுதந்திரம் கொடுத்தது என்று பிதற்றல்கள் பார்க்கிறோம். போஸ் அப்போது இராணுவமே கட்டவில்லை அதற்கான குழுவும் முயற்சியும் தான் செய்து கொண்டு இருந்தார். ஆங்கில அரசு உண்மையிலேயே சுதந்திரம் கொடுக்க முடிவு செய்தது காந்தியின் போராட்டத்தால் தான் பிரிட்டிஷ் இந்தியாவை ஆட்சி செய்தது இந்திய மக்களின் நம்பிக்கையின் கொண்டு, இன்று கூட சாதாரண மக்கள் வெள்ளைக்காரன் ரோடு போட்ட ஸ்கூல் கட்டினான் ரயில் விட்டான் என்று சொல்வதை பார்க்கிறோம்.அந்த நம்பிக்கையை காந்தி உடைத்தார் பிரிட்டிஷ் நம்மை சுரண்டுகிறது என்று மக்களுக்கு புரியவைத்தார். இனி லாபகரமாக இங்கே இருக்க முடியாது என்று நினைத்து வெளியேறினார்கள்.
காந்தி மாபெரும் அழிவு இல்லாமல் ஒரு சமரச முடிவை இருதரப்பும் பேசி எடுக்க முடியும் என்ற மாபெரும் போராட்ட வடிவத்தை நமக்கு அளித்தார். ஆயுதம் ஏந்திய அத்தனை போராட்டமும் உலகில் பெரும் அழிவையே தந்தது என்பது நம் கண்முன் இருக்கும் உண்மை . நமது சுதந்திரத்திற்கு பின் இப்படியான அஹிம்சையின் வழியே உலகம் கண்டு கொண்டு வெற்றியும் அடைந்து இருக்கிறது.
காந்தியின் அரசியல் அப்படித்தான் அமைந்திருந்தது. ஒற்றுமை மூலம் அறச்சார்பு மூலம் நம்மை நாம் மேம்படுத்திக்கொண்டு எதிர்தரப்பின் அறத்துடன் தீர்மானமான விடாப்பிடியான பேச்சுவார்த்தையை நிகழ்த்து வதையே அவர் போராட்டம் என்று சொன்னார். இருபதாம் நூற்றாண்டில் பேரழிவு இல்லாமல் வெற்றிகளை அடையக்கூடிய ஒரே போராட்ட வழி அதுவே என்று கற்பித்தார். அது தன் இறுதி விளைவாக வெறுப்பை உருவாக்குவதில்லை.
அவரின் ஊன்றுகோளை நாம் வலுவாக பற்றி கொண்டு முன்னோக்கி செல்வதே இன்று நமக்கு முன்னே இருக்கும் மிகச்சிறந்த வழிகளில் ஒன்று..
காந்தியை புரிந்துகொள்ள "சத்திய சோதனை"யை விட எனக்கு "இன்றைய காந்தி"யே பெரிதும் உதவியது. அப்படிப்பட்ட இன்றைய காந்தியின் நீட்சியாகவே இந்த உரையாடும் காந்தியை பார்க்கிறேன்.
வாழ்வையே மாற்றிய புத்தகம் என்பார்களே, எனக்கு "இன்றைய காந்தி" அப்படிப்பட்ட புத்தகங்களில் ஒன்று. அந்நூலினை படிக்கும் முன்பு வரை எனக்கு காந்தி மீது பெரிய மதிப்பேதும் இருந்தது கிடையாது, ஒரு வகை ஏளனம்தான் இருந்தது.
இன்னும் சொல்லப் போனால் நான் சத்திய சோதனையையும் இன்றைய காந்தியையும் படிக்கத் தொடங்கியதே, அவருடைய குறைகளை மேலும் தெரிந்துகொண்டு நகையாடுவதற்காக தான்.
ஆனால் இன்றைய காந்தியை படித்து முடிக்கும் போது அந்த கிழவரை விரும்பாமல் இருக்க முடியவில்லை. இப்போது எனக்கு இந்த உலகிலேயே மிகவும் பிடித்த மனிதர் என்றால் அது காந்திதான். போட்டியே கிடையாது.
அப்படிப்பட்ட நூலின் நீட்சி இது. காந்தியை அறிய ஆர்வம் உள்ளவர்கள், அறத்தின் பால் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள், ஏன்...காந்தியை காரணமின்றி வெறுப்பவர்கள், காரணத்தோடு வெறுப்பவர்கள் கூட கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இந்த உரையாடும் காந்தி.
ஒவ்வொரு கட்டுரையையும் படித்து முடிக்கும் போது, ஆசிரியரின் வலைதளத்திற்கு சென்று அந்தந்த கட்டுரைகளை தேடி, கொழுவியை என்னுடைய நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளாக அனுப்பி, படிக்கச் சொன்னேன். அவ்வளவு முதன்மையாக பட்டது எனக்கு அனைத்து கட்டுரைகளும்.
மேலும் இந்நூல் எனக்கு இரண்டு நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்று, இராமசந்திர குகா எழுதிய "இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு" மற்றொன்று "உப்புவேலி". இவை இரண்டையும் நான் விரைவில் படிப்பேன். நன்றி, ஜெ.