இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிறார்கள். அடுத்த தலைமுறையில் இக்குழப்பங்களுக்கு இடமிருக்காது, சமூகத்திலேயே இதற்கான பொதுவிடைகள் உருவாகியிருக்கும், ஐரோப்பிய அமெரிக்க சமூகங்களில் இருப்பதைப்போல. சமூகம் இத்தனை அழுத்தத்தை தனிமனிதனுக்கு அளிக்காது.
திரும்பத்திரும்ப என்னிடம் இந்த வகையான வினாக்கள் கேட்கப்படுகின்றன. இத்தகைய வினாக்கள் இன்றைய தலைமுறையினரிடம் வலுவாக எழுந்துகொண்டிருக்கின்றன என நினைக்கிறேன். சென்ற தலைமுறையில் இத்தகைய வினாக்கள் இல்லை. அன்று ஒவ்வொருவரும் சமூகத்தின் பொது அடையாளத்தை தன் அடையாளமென்று கொண்டனர். வேலை, குடும்பம், தனிச்சொத்து, தொழில்வெற்றி, ஓய்வுவாழ்க்கை, இறப்பு என பிறர்போற்றும் வாழ்க்கையே தன் வாழ்க்கை என்று எண்ணி எளிதில் அமைந்தனர். அதுவே நம் மரபு நமக்களிக்கும் வாழ்க்கைப்பாதை. அதை ஏற்றுக்கொண்டால் சிக்கல்களே இல்லை.
இவ்வகையான கடிதங்களுக்குச் சென்ற இருபதாண்டுகளாகப் பதில் போட்டுக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இது நம் சமகாலத்தில் உள்ள பொதுப்பிரச்சினை. அனைவருக்கும் உரியது. இதற்கு தனிப்பட்ட ஆலோசனைகள், வழிகாட்டல்கள் உண்மையில் உதவாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரசனை, தேடல், அறிவுத்திறன், வாழ்க்கைச்சூழல் சார்ந்து தானாகவே தேடிக் கண்டடையவேண்டியது இது. ஆகவே இப்பிரச்சினையின் பொதுவான தளங்கள் என்னென்ன என்று மட்டுமே சொல்லமுடியும். இரு கோணங்களில். ஒன்று, இது ஒன்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதனுக்கே உரிய தனிப்பிரச்சினை அல்ல. என்றுமுள்ள மானுடப்பிரச்சினை. ஆகவே இதை மரபு எப்படி அணுகுகிறது என்று. இரண்டு, இன்றைய சூழலில் இது பொதுவாக எப்படிப் பொருள்படுகிறது என்று.
திரும்பிப்பார்க்கையில் நாம் நமக்களிக்கப்பட்ட நாட்களை நம்முடைய அகம் நிறைவுகொள்ளும்படி செலவிட்டிருந்தால், அந்த வாழ்க்கை முழுமையானதுதான்.
தன்னறத்துக்கும் சூழலுடன் ஒத்துப்போவதற்கும் நடுவே ஒரு துலாமுள் போலவே நாம் செல்லவேண்டியிருக்கிறது.
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
(அம்பும் அதன் நிழலும் ஒரே சமயத்தில் இலக்கைத் தாக்குகின்றன - சங்கப்பாடல் உவமை )
தன்னறம் குழுவிற்கும் , எனக்கு இப்புத்தகம் கிடைக்க உதவிய ஜெமோவின் வாசக வட்டத்திற்கும் நன்றி. இலவசமாகக் கிடைத்த புத்தகம் என்பதால் பாராட்டிய பிரமாணப் பத்திரமாக மாறிடக் கூடாது என்ற கவனத்துடன். முதலில் ஜெமோவை புற்றிய எனது புரிதல்களுடன் புத்தக விமர்சனத்திற்குள்.
ஜெமோ ஒரு அடையாளத்தில் வைத்து கொண்டாடப்பட வேண்டிய நபர் இல்லை என்பதே.
தமிழ் சூழ் இலக்கிய உலகை கூர்ந்து கவனிக்கும் எந்த வாசகனும் இதை அடையாளம் காண முடியும், ஜெமோவின் எழுத்தில் பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மத, சாதிய, வலது சாரிய, இடது சாரிய ஆதரவு சூழல்களைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எழுதுகிறாரோ என்பதே. என் புரிதலில் அவரை அப்படிக் காண்பது முரண். சேற்று புதைக்குழிக்குள் தள்ளி முற்றிலுமாக தவிர்த்து விடுவதின் அபத்தத்தை அவரது தன் மீட்சி பதிலில் கண்டடைய முடிந்தது மகிழ்ச்சி.
ஒன்று மட்டும் இது வரை ஜெமோ வை அப்படி என்னால் ஒதுக்கி வைக்க முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. என்னதான் அவரது எழுத்தில் இருக்கிறது என்ற தேடுதலை இன்று வரைக் எனக்குக் கொடுத்துக் கொண்டுதானிருக்கிறது. சில இடங்களில் ரொம்ப இழுப்பது வலிந்து திணிக்கப்படும் காட்சிகள் என்ற குறை என் மனதில் இருந்தாலும். தன் மீட்சி அந்த சலிப்போடு இல்லை.
அரிதினும் அரிதாய் எழுதும் மக்களில், துதிபாடல், சாதியத்தேடல், மதப் பெருமை, இசங்களின் வால்பிடி என ஏதோ ஒன்றை தொங்கி வெளிவரும் புத்தகக் குவியல்களில் தனக்கான தனியான இடத்திலிருந்து சலிக்காது எழுதிக் குவிக்கும் எழுத்து இயந்திரத்தின் முன் நாமென்ன செய்ய முடியும். மெல்ல மெல்ல எழுத்து குவிப்புகளால் வளர்த்து கொள்ளும் பிரமாண்டத்தை பிரமிப்புலோ, சலிப்பிலோ கடப்பது மட்டும்தான்.
தன் மீட்சியை வாசித்தவுடன் என்னத் தோன்றியது, இது ஒரு குழு உறுப்பினர்களோ, அல்லது அவரை இணையத்தில் பின்தொடர்பவர்களோ அல்லது ஆசானென மதிப்பவரிடம் தொடுக்கப்பட்ட வெறும் கேள்வி பதில் தொகுப்பா, ஆசானைப் போன்று மாற அவர் கொடுக்கும் எளிய குறுக்கு வழியா, காலத்தை கடத்தி விடு வெறும் வியாபார எழுத்தா, தனக்கான இடம் தேடும் மனிதர்களுக்கானதா, வலது இடது ( என்ற ஜெயமோகனை) தேடி அடையும் புத்தகமா, குறை சொல்பவருக்கானதா, தத்துவார்த்த மதிப்பிடு கொடுக்கலாமா, இளைஞர்களுக்கான வழிகாட்டி நூலா ? எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். இதில் ஏதோ ஒன்றை ஏதோ ஒரு பதிலில் தொட்டுச் சென்றுள்ளார்.
புத்தகம் வாசித்தவுடன் கிடைக்கும் மன நிறைவு எல்லாருக்கும் நிச்சயம் கிடைக்கும் என்ற உறுதியாக சொல்ல முடியும். அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தை எப்படி அளந்து சலிப்பில்லாது வாழ முடிகிறது என்பதை வாசித்து உணர முடிகிறது . சலிப்பில்லாது வாழ்ந்து எழுதிக் கொண்டேயிருக்கும் ஜெமோவிற்கும் சலிப்பும், வாழ்வியல் வெறுப்பும் அதன் மீதான விளைவுகளும் அதை எதிர்கொண்ட தன்னாற்றலும் வாசிப்பவர்களில் ஏதோ ஒரு சிலரின் ஊக்க மருந்து.
வாழ்வியல் சம்பவங்கள் உலகிலுள்ள அத்துனை உயிருள்ள, உயிரற்ற, இயந்திர மற்றும் பஞ்சபூதத் தொடர்பில் சுழலும் வாழ்வியல் சக்கரம். இதில் எத்தொடர் விடுபட்டாலும் தொடர்பை முடிப்பது அசாத்தியம். அத்துனை தொடர்போடு தொடரை கடப்பதற்கான வழியின் சிறுத்துளியே தன் மீட்சிக்கான உருவாக்கம்.
இன்றைய இளைஞர்களுக்கு இலக்கியம் சார்ந்த எதிர்கால வாழ்வின் தேடல்களுக்கும் அதைச்சார் குழப்பங்களுக்கும், தோல்விகளுக்கும் அதன் மூலம் முன்னேற தடையாகும் தடுப்பரண்களைத் தட்டி எறிய தன் மீட்சி உதவும்.
ஒருவழியாக........ ஜெயமோகன் மிக முக்கியமான எழுத்தாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை... ஆனால் ஒரு தனி மனிதராக அவர் மீது எனக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு. இந்நூல் சில ஏற்றுகொள்ள கூடிய கருத்துக்களும் நிறைய ஏற்றுகொள்ள முடியாத முரண்களும் கொண்டிருக்கிறது. மிக கடினமான வசிப்பாக அமைந்தது.
இளைய தலைமுறைக்கு ஜெமோ அளிக்கும் ஆழ்ந்த தரமான அறிவுரைகள். இதில் எழுதப்பட்டுள்ள சில கேள்விகள் மிக மிக அழகானவை, சிந்தனை ஓட்டத்தின் வெளிபாடுகள். திருப்பதிருப்ப சில கேள்விகளும் பதில்களும் சிறிது களைபூட்டினாலும், தன்னறம் தேடுபவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு பொக்கிஷமே.
“உலகியலை கனவுகளுக்காக உதாசீனம் செய்தால் உலகியலுக்காக கனவுகளைக் கைவிட வேண்டியிருக்கும்.”
“தன்மீட்சி” என்பது தனக்குள் திரும்பி வந்து, உண்மையான சுயத்தை மீண்டும் கண்டுபிடிப்பதையே குறிக்கிறது. இது மனிதனின் அக உணர்வுகளைச் சீராக்கி, தனது வாழ்வில், எண்ணங்களில் எவ்வாறு நேர்மையாக இருக்கலாம் என்பதை கூறும் ஒரு மனோபாசக தன்மை.
சமீபத்தில் நான் வாசித்த non fiction புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இது. ஜெயகாந்தன் தனது வாசகர்களின் கேள்விகளுக்கு கொடுத்த பதில்களின் தொகுப்பே இந்த நூல். வாசகர்களுக்கு தன்னுணர்வு (self awareness)ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. எல்லா வகையான மனிதர்களுக்கும்,வாசகர்களுக்கும்,எழுத்தாளர்களுக்கும் இதில் அவர்கள் தேடும் கேள்விக்கான விடைகள் கிடைக்கும். வாழ்வின் சிக்கலான கேள்விகளுக்கு சிக்கலற்ற பதில்களை வழங்குகிறார் ஜெயமோகன்.
அவருடைய வாழ்க்கையையும் மிகவும் நேர்மையான முறையில் இதில் பகிர்ந்துள்ளார். அவருடைய பதில்கள் வாசகர்களை ஆழமாக உணர வைப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு வாழ்க்கையை மீதான ஒரு புதிய பார்வையை வழங்குகிறது. இது ஒருவரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது.
இதில் வரும் எல்லாமே நம்முள் ஆழ்ந்த தாக்கத்தையும், மனதில் உள்ள குழப்பங்களை தீர்க்கும் வகையில் இருக்கும்.
The exterior of Tamil society is transforming so fast in front of our eyes we have no time to pause and think what effect this is having on the interior of Tamil society, especially the minds of young people. And, god forbid, if that young person belongs to the tiny minority that reads serious literature and studies history and philosophy while remaining a cog in the modern economic and industrial machine, he'd soon come to the conclusion that he has no one to talk to about his anxieties (personal or otherwise) that he feels so acutely.
It is in this context Jeyamohan receives the barrage of letters from young readers that he does. They address him variously: from respectful 'Jeyamohan' to friendly 'Je', from traditional 'Aasan' to even 'Appa'. He responds to them tirelessly. This continuous conversation Jeyamohan is having on his website is almost as important as that of his literary contribution. Just as no one else could have written Venmurasu, no one else could have had these conversations either. Many of them are inspiring enough and truthful enough to have literally changed lives.
That said, Jeyamohan's replies in this short book can be TLDR-ed in Aristotle's words: Happiness is an activity of the human soul in accordance with excellence and virtue, and it is manifested over an entire lifetime.
தன்னறம், தனிமனித மேம்பாடு, சோம்பலை விடுத்து லட்சியத்தை அடைதல், மனசோர்விலிருந்து மீளுதல் குறித்து வாசகர்கள் எழுப்பிய வினாக்களுக்கு ஆசிரியர் ஜெயமோகன் அளித்த பதில்கள் அடங்கிய தொகுப்பு இது.
ஒரு தனிமனிதனுக்கு தன்னுடைய வேலை நிமித்தமாகவும், படிப்பு சார்ந்தும் மற்றும் சமூக கோட்பாடுகளால் ஏற்படும் மனச்சிக்கல்கள் குறித்தும், அதை எப்படி அணுகுவது என்பது பற்றியும் விவரித்துள்ளார் ஆசிரியர். தன் சொந்த அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.
வாழ்வில் எந்தத் தருணத்திலாவது "I am stuck" என்று தோன்றினால் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம். மனத்தடைகளை உடைத்து அடுத்த கட்டத்திற்கு நகர உதவி செய்யும். ஆனால் நேரடி பதில்கள் கொண்ட புத்தகம் அல்ல இது. நீங்கள் உங்கள் அகத்தின் வழியே விடைகளைத் தேட ஒரு தூண்டுகோளாக அமையும் அவ்வளவே.
இது என் முதல் புத்தக விமர்சனம். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தனது வலைதளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த தன்மீட்சி. ஏதாவதொரு சூழலில் நாம் அனைவருமே நம்மை ஏதோவொன்றிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறாக ஏதோவொன்றில் சிக்கித் தவிக்கும்பொழுது நமக்கு எண்ணற்ற கேள்விகளும் மன உளைச்சல்களும் நம்மை பாடாய் படுத்தும். நாம் செல்லும் பாதை சரியா https://vaansittu.blogspot.com/2019/0...
எது வேரில் கசக்கிறதோ, எது இலையில் துவர்க்கிறதோ, அதுவே கனியில் இனிப்பாகிறது - ஜெ
என்னுள் பெரும் மாற்றத்தை விதைத்த நூல். அலைக்கழிப்புகள் கொண்ட மனம் வழி தேடி அலைகையில் கண்டுகொள்ளும் புத்தகம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. அந்த வயதின், வாழ்வின் நிலையிலிருந்து எழும் கேள்விகள் அவை. அவ்வாறான என் பல சிந்தனைக் குழப்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையை அளித்த ஒரு நூல். கட்டுரை வடிவில், பல்வேறு வாசகர் கடிதங்களுக்கு பதிலாக ஆசிரியர் எழுதிய கடிதங்களின் தொகுப்பு.
This entire review has been hidden because of spoilers.
இந்த புத்தகம் ஒவ்வொருவருடைய தன்மீட்சி பற்றி பேசுகிறது. லட்சியவாதத்தை முன் வைக்கிற புத்தகம். வாசகர்களின் கேள்வி - பதில் போல இந்த புத்தகம் அமைந்திருப்பது இதன் தனி சிறப்பு. இந்த கேள்விகள் இந்த சமூகத்தின் முக்கியமான பிரச்சனைகளை, சிக்கல்களை முன் வைக்கிறது. அதற்கு ஜெயமோகன் அவர்களின் பதில் நுட்பகமாகவும் , ஆழ்ந்த தரிசனத்துடன் இருக்கிறது. யாரும் தவற விடவே கூடாத புத்தகம்.
வாழ்வின் இலக்கு என்ன? சோம்பலும் ஆணவமும் நம் வாழ்வை எப்படி திருடுகின்றன? அகம் புறம் - இரு நிலையிலும் மகிழ்ச்சியுடன் எப்படி? நான் யார்?இந்த உலகிற்கு நான் ஆத்மாத்மமான செய்யப்போகும் வேலை என்ன? போன்ற மீள கேள்விகளுக்கு ஜெ அவர்களின் தன்மீட்சி மூலம் நம்மை மீட்டெடுக்கலாம். தன்னறம் நூல் வெளியீடு மற்றும் குக்கூ காட்டுப்பள்ளிக்கு மிகப் பெரிய நன்றிகள் இவை மிகப்பெரிய சேவை
This was on my TBR for a long period. Thought it was about 'recovering by ourselves ' not wrong, neither right. Contains selected Q n A between author and readers.
எழுத்தாளர் ஜெயமோகன் தனது வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பே தன்மீட்சி. இப்புத்தகம், வழக்கமான non-fiction புத்தகங்களைப் போல “எப்படி வாழ வேண்டும்” என அறிவுரை கூறாமல், “ஏன் வாழ்கிறோம்?” என்ற ஆழமான கேள்வியை நமக்குள் எழுப்புகிறது.
வெறுமை, வாழ்வின் அர்த்தம், பணியிட சிக்கல்கள், தனிமை, சோம்பல், லட்சியமின்மை, வாசிப்பின் அவசியம், இயந்திரமயமான வாழ்க்கை போன்ற பல்வேறு கோணங்களில் எழும் மனித மனத்தின் கேள்விகளுக்கு ஜெயமோகன் தெளிவாகவும் ஆழமாகவும் பதிலளிக்கிறார். ஒவ்வொரு பதிலும் வாசகரின் உள்ளத்தைத் தொடும் உண்மை நுணுக்கத்தை கொண்டுள்ளது.
மனம் துவண்டு போய்விட்டது போல் தோன்றும் எந்த தருணத்திலும், இந்த நூல் ஒரு restart button போல செயல் படும். நீங்கள் தேடும் கேள்விகளுக்கான பதில்கள் கண்டிப்பாக இதில் இருக்கும்.
இந்த நுற்றாண்டின் மிக முக்கியமான பிரச்சனை ஒவொரு தனி மனிதனும் தங்களுக்கான தனி வாழ்வை அடைய நினைப்பது , சென்ற தலைமுறை தனிப்பட வாழ்வு இல்லாமல் இருதார்கள் குடும்ப வெற்றி குடும்ப சொத்து என்று இன்று தனிப்பட வாழ்வை அடயநினைக்கும் அனைவர��� முன் நிற்கும் கேள்வி , நான் யார் ? மனித வழிவிற்கு என்ன அர்த்தம் ? விங்குகள் போல வாழ்ந்து மடிவது தான் மனிதன் வேலையா ? என்ற கேள்விகள் வரும் இதை போன்ற வாசகர்கள் கேட்ட கேள்விக்கு ஜெயமோகன் தொடர்ந்து இருபது வருடங்களாக பதில் எழுதிக்கொண்டு இருக்கிறார் காரணம் இதை அவர் இந்து நூற்றாண்டின் உள சிக்கல் என்று கருதுகிறார் . மனித இருப்பு குறித்த கேள்வி ஒருவன் மனதில் எழும்போது கூடவே அறம் சார்ந்த குழப்பங்களும் வருகிறது அதற்க்கான பதிலாக இந்த நூல் உள்ளது . பொதுவாக இன்றைய இளஞ்சர்கள் விருப்பம் இல்லாத துறைகளில் சமுக குடும்ப நெருக்கடியால் தங்களை செளுதிகொண்டு விருப்பம் இல்லாமல் உழலுகிறார்கள் , சிலார் பொருளியல் தேவைக்காக தங்கள் கனவுகளை துறக்கிறார்கள் . அவர்கள் போன்றவர்கள் தங்கள் அக கனவுலகை கண்டடைய இந்த நூல் வழிக்காட்டும் ... ஒரு மனிதன் எப்படி தன்னை பகுதுகொண்டு தான் புறவுளகிலும் சமூகத்திலும் நற்பெயரை பெற்று தான் அகவிடுதலையும் சாத்திய படுதிகொல்வது என்று இந்த நூல் பதில் அளிக்கிறது ....