கடல் பயணங்கள் - மருதன் - கட்டுரை தொகுப்பு - பதிப்பகம் கிழக்கு - பக்கங்கள் ,144 - முதல் பதிப்பு , 2017
கடல் பயணங்கள் - பயணங்கள் மூலம் உருவான மாற்றத்தை பற்றி பேசும் புத்தகம்
புத்தகம் பற்றி :
மொத்தம் 14 கட்டுரைகளும் 144 பக்கங்களும் கொண்ட இந்த புத்தகம் கடல் பயணத்தில் சிறந்தது விளங்கிய மனிதர்களை பற்றி பேசுகிறது முதல் கட்டுரைய வாஸ்கோட காமாவின் இந்திய பயணம் எப்படி ஆரம்பித்தது அதற்கு காரணம் என்ன என்பது தொடங்கி கடைசியாக அவர் எப்போது இந்தியா வந்து சேர்ந்தார் அதன் பிறகு இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன என்ற தகவல்கள் பற்றி சொல்லி இருக்கிறார் உண்மையை சொல்ல போனால் இந்தியாவிற்கு கடல் பயணமாக வந்த முதல் ஐரோப்பியர்கள் போர்துகிசியர்கள் தான் 1961 ஆண்டுக்கு பிறகு கடைசியாக சென்றவர்களும் போர்துகிசியர்கள் தான்
அடுத்த கட்டுரை செங் ஹே என்று சொல்ல படும் சீன மாலுமியை பற்றியது இவரை பற்றி படிக்கும் பொது தான் கிட்டதட்ட ஐரோப்பிய மாலுமிகளுக்கு சமமான ஒரு மாலுமியாக இருந்து வந்து இருக்கிறார் என்பது தெரிகிறது அப்படி பட்ட சாதனைகளை செய்து இருக்கிறார் அதை இந்த புத்தகத்தை படிக்கும் பொது தெரிந்த கொள்ளலாம்
அது மட்டும் இல்லாமல் இபின் பதூதா , மார்கோ போலோ , பார்தோலோமியோ டியாஸ் , போன்றவர்களின் பயணங்களும் சரி இந்தியாவை கண்டுபிப்பதாக சொல்லி கொண்டு மத்திய அமெரிக்காவில் குடி ஏறின கொலம்பஸன் பயணங்களும் சரி நம்மை ஆச்சிர்யத்தில் ஆழ்த்துகிறது
பயணங்கள் என்பது புது புது நாடுகளை கண்டுபிடித்து அங்கு வர்த்தகம் செய்கிறேன் என்ற பெயரில் பூர்வ குடிகளை அடிமை படுத்தி அங்கு உள்ள செல்வங்களை சுரண்ட மட்டும் தான் என்பது இல்லாமல் சார்லஸ் டார்வின் போல இயற்கையை பற்றி படிக்கவும் , மனிதர்களை பற்றி தெரிந்துகொள்ள செய்த பயணங்களும் உண்டு அதுவும் இந்த புத்தகத்தில் இருக்கிறது. கண்டிப்பாக படிக்கச் வேண்டிய புத்தகம் இது