எஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் நுண்ணோவியங்களை போன்றவை, நுட்பமான சித்தரிப்பே அதன் ஆதாரம், இக்கதைகள் வாழ்வின் நெருக்கடிகளையும் அதை மீறி உன்னதங்களை தொட முயலும் மனிதர்களின் எத்தனிப்பையும் பேசுகின்றன.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் இந்த சிறுகதையின் தொகுப்பில் உள்ள 16 கதைகளும் மனதினை ஏதோ ஒரு கேள்வி கேட்கத் தான் செய்கின்றது. வாழ்வின் நெருக்கடி மனிதர்களை நிலைகொள்ள முடியாமல் தவிக்க வைக்கிறது.இக்கதைகளில் வரும் மனிதர்கள் பிரச்சனைகளால் துரத்தப்படுகிறார்கள்.உலகம் அவர்கள் மீது கருணை கொள்ளவில்லை. வாழ்வோடு சமர் செய்யும் இந்த எளிய மனிதர்களின் கதைகளே இத்தொகுப்பின் மையம்.வாசிக்க வேண்டிய புத்தகம்.
நான் எப்போதும் சிறுகதைகளை இறுதி வாய்ப்பாகவே வாசிக்க விரும்புவேன். புதுமைப்பித்தன் தொடங்கி சமகால எழுத்தாளர்களின் சிறுகதைகள் வரை தொடர்ந்து வாசித்து வந்தாலும், என்னை அதிகம் ஈர்ப்பவை புதினங்களும் வரலாற்று நூல்களும்தான். சிறுகதை என்பது ஒரு குறிப்பிட்ட தருணத்தை அல்லது உணர்வை மட்டுமே பதிவு செய்யக்கூடிய வடிவம் என்ற எண்ணம் எனக்குள் நீண்ட காலமாக இருந்தது. ஆனால் அந்த எண்ணத்தை முற்றிலும் சிதைத்து, சிறுகதைகளின் மீதான என் பார்வையை மாற்றிய சில தொகுப்புகள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று மழைக்கண். தற்போது அந்த வரிசையில் தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் தொகுப்பும் இணைந்துள்ளது.எளிய மனிதர்களின் வாழ்க்கை, அவர்களது போராட்டங்கள், ஆசைகள், ஏக்கங்கள், சமூக முரண்பாடுகள், காலத்தின் மாற்றங்கள் என பல்வேறு பரிமாணங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்தத் தொகுப்பில் மொத்தம் பதினாறு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் தனித்துவமான களத்தையும், வேறுபட்ட மனித அனுபவங்களையும் முன்வைக்கிறது. சூரியகாந்திப் பூவை ஏந்திய சிறுமிகள் ஓர் அழகான கிராமத்துக் கதை. குடும்பச் சூழ்நிலையின் காரணமாக வெளிநாட்டில் வேலை பார்க்கும் குடும்பத்தைலைவன், அவனது மனம் படும் பாட்டையும், தந்தையின்றி ஏங்கித் தவிக்கும் குழந்தைகளின் பாசப்போராட்டத்தையும், எல்லாவற்றையும் தைரியமாக சமாளிக்கும் தாயின் மன உறுதியை மிகவும் திறம்பட கையாண்டுள்ளது சிறப்பு.
தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்’ என்ற இந்தச் சிறுகதையை எப்படிச் சொல்வது என்பதே சற்று கடினமாக இருக்கிறது. ஒரு மனிதன் இவ்வளவு வித்தியாசமாகவும் ஆழமாகவும் இருக்க முடியுமா என்று எண்ண வைக்கும் பாத்திரமாக பிலாத்து தோன்றுகிறார். யாரும் வசிக்காத, ஒருநாள்கூட தங்காத ஒரு வீட்டிற்கு எண்ணற்ற சாளரங்கள் இருப்பது வியப்பையும் ஒரு சேர சிந்தனையையும் உருவாக்குகிறது. நினைவுகளின் வழியே பயணிக்கும் மனித மனம், அதன் ஆசைகள், ஏக்கங்கள், வெற்றிகள், தோல்விகள், இருப்பு மற்றும் இன்மை போன்ற ஆழமான தத்துவ உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்தக் கதை அழகாக எழுதப்பட்டுள்ளது.
பாங்கிணறு- நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். அந்த நீர்ப் பொய்த்தால் உழவுத்தொழில் அழியும், உணவுப் பஞ்சம் ஏற்படும், ஏழை எளிய மக்கள் செத்து மடிவர்.உழவர்களின் வேதனையான வாழ்க்கையை மிக விசித்திரமாக புனையப்பட்ட இக்கதை பைனான்ஸ் கம்பெனியின் சுரண்டலையும் அரசாங்கத்தின் அலட்சியத்தையும் நலிவடைந்த உழவுத் தொழிலையும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளது.
பகற்திருடர்கள் சங்கம்.வெளிப்படையாகவும், வெட்கமின்றியும், அதிகாரம் அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றுபவர்களைக் பகற்திருடர்கள் என்பர்.சமூகத்தில் வெளிப்படையாக நடைபெறும் ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றை நையாண்டி கலந்த விமர்சனத்துடன் பேசும் சிறுகதை.சமூகத்தில் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஊழல் மற்றும் அநீதிகளை பேசும் சிந்திக்கவைக்கும் கதை. 1ரூ காசை நம்மிடமிருந்து திருடினால் திருடன் பட்டம் கட்டும்நாம் அதே நாம் வெளிப்படையாக வாங்குபவர்களை திருடன் முத்திரை குத்துவதில்லை.
அலையின் உயரம் இந்த சிறுகதை அறிவியல் முன்னேற்றத்தால் முடங்கிப்போன பல தொழில்களில் ஒன்று அச்சகம். அதனால் ஏற்பட்ட தொழில் முடக்கத்தால் கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையால் ஏற்படும் மனநிலை சார்ந்த சிக்கல்களை எடுத்துரைக்கிறது
இரும்பின் சிரிப்பு ஐரோப்பாவில் ரோம சமூகத்தில் பதினொன்றாம் நூற்றாண்டுவரை நிலவி வந்த கற்புக்கவசத்தைப் பற்றியது. துறவிகள் வசித்த மடங்களில் கூட கற்புக் கவசத்தை கன்னியர்கள் அணிந்து இருக்கின்றனர்.கற்புக் கவசத்தை கண்டுபிடித்தது ஆண் தான், அந்த கற்புக்கவசம் போட்ட பெண்களை ஏமாற்றத்தால் கொலை செய்ததும் ஆண்தான். இவை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகள். அந்தக்காலம் தொட்டு தற்போதுவரை பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவி வருகிறது.இரும்பு கதவுகளும் ஜன்னல்களும் உறுதியான சுவர்களும் பாதுகாப்பு கேமராகக்ளும் இருந்த போதும் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகவே உணர்கின்றனர்.
ஓராயிரம் கைகள் சிறுகதை தாலிச்செயின் வழிப்பறி செய்யப்பட்ட பெண்ணின் மனநிலையைப் பதிவு செய்கிறது. எதிர்பாராமல் நடந்த நிகழ்வு எவ்வாறு ஒரு மனிதரின் மன அமைதியைக் குலைத்து, மனிதர்கள் மட்டுமின்றி கடவுளிடமே நம்பிக்கையை உடைத்து , அவரது அன்றாட வாழ்க்கையையே பாதிக்கிறது என்பதை இந்தக் கதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறது.
வெறும் பணம் என்னும் சிறுகதை எதிர்பார்க்காத தாக்கத்தை ஏற்படுத்தியது. பணம் மட்டுமே எல்லாம்,பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் போன்றவற்றை எள்ளிநகையாடுவதைப் போல அமைந்துள்ளது.
This entire review has been hidden because of spoilers.
Beautiful, bizarrely imagined, abstractly realist stories that explore deeper themes of humanity and social dilemmas. With the first story, I thought I wasn't gonna like this book. I don't know why would they place it as the first story, let alone placing it at all. But the latter stories proved me wrong. Absolutely Beautiful. Strictly recommended.
Its a story collection of 16 shorties. I would say none of the stories had an ending and its also did not give the readers satisfaction. Overall a passable book.