கால மாற்றத்தின் வேகத்திற்கு ஏற்ப நாம் உண்ணும் உணவும், உடுத்திக்கொள்ளும் உடைகளும் மட்டும் மாறவில்லை. நம் கோட்பாடுகளும் சிந்தனைகளும் கூட மாறி விட்டன. பழமையைப் போற்றுதல் சிறப்பு! எனினும் காலத்திற்கு ஒவ்வாத பழமைவாதக் கொள்கைகளைப் போஷிப்பது??? வழி வழியாய்ப் போதிக்கப்பட்ட கட்டுப்பெட்டித்தனங்கள் ஒருபக்கம் , அதீதப் பெண்ணியத்தின் புரட்சிக் குரல்கள் மறுபுறம். இவ்வெதிரெதிர் துருவங்களுக்கு இடையே நின்று வாழ்க்கையை எதார்த்தமாக நேர்மையாக அணுகினால் நன்றாக இருக்குமே என்ற விருப்பத்தின் சிறு இழையே இக்கதை. உங்கள் உள்ளம் வருடக் காத்திருக்கும் ‘பூவிதழ் தூரிகை’-ஐ வாசித்துப் பாருங்கள் ! இயல்பான ஆணும் பெண்ணும்; அவர்கள் வாழ்வின் சுவாரஸ்யப் பக்கங்களும் இந்நாவல்
அருமையான கதை .... வாழ்க்கையில் எதுவும் முற்றுபெற்றதென பொருள் இல்லை .... உடலில் உயிர் இருக்கும் வரை வாழ்க்கை பயணம் தொடரும் ....ஒரு முடிவில் இன்னொன்றின் துவக்கம் இருக்கும் .... அர்ஜுன் யாழினியின் வாழ்க்கையை போன்று ....இருவரும் ஒவ்வொருக்கொருவர் பூவிதழ் தூரிகை கொண்டு வாழ்க்கையை வண்ண மயமாக்கிக்கொள்கின்றனர்...