தஞ்சாவூர்க் கவிராயரின் கட்டுரைகளைப் படிக்கும்போது பலருக்கும் பெருமூச்சு வரும் என்பதில் சந்தேகமில்லை. இழந்த காலத்தின் மோசமான விஷயங்களைப் பற்றி தஞ்சாவூர்க் கவிராயர் வருத்தப்படுவதில்லை. அந்தக் காலத்தின் ரசனை மிகுந்த அம்சங்கள் காணாமல் போனது பற்றிதான் அவரது கட்டுரைகள் பேசுகின்றன. வாழை இலையில் சாப்பிட்ட அந்தக் காலத்தையும் வாழை இலை வடிவிலான பிளாஸ்டிக்கையும் ஒப்பிட்டு நம்மை வாழை இலைக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறார். அவருடைய சிஐடி பெரியப்பா எப்படி வள்ளலாரில் ஆழ்ந்தவர் என்பதை கோடி காட்டியிருக்கிறார். வீட்டுக்கு விருந்தினர் வருவதை காகங்கள் எப்படி முன்கூட்டியே காட்டும் என்பதை நினைவுகூர்ந்து மாமா வீட்டுக்கு பலாப்பழத்துடன் வந்து நல்லெண