சுமனசி தன் ஒரே பாதுகாப்பான அக்கா வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு விட்டது. திக்கற்றவளுக்கு தங்க இடம் ஏற்பாடு செய்துக் கொடுத்தாள் மந்தாகினி. கைமாறாக புகழ் பெற்ற நடிகன் உதயராஜனின் கையெழுத்தினைத் தான் வாங்கித் தரச் சொன்னாள் இந்தச் சின்ன உதவியைக் கூடச் நம்மால் செய்ய முடியாதா என்று தான் கிளம்பினாள் சுமனசி...நடந்தது எல்லாமே தலைகீழாகப் போயிற்று.உதயராஜனின் அறையில் இரவு தங்கும் படி ஆகி விட்டது...இதன் பின் விளைவுகளில் இருந்து சுமனசி தப்பிக்க முடியுமா ?
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.
She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.
She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.
தனக்கொரு ஆபத்து நேர்ந்த போது உதவியவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நன்றி கடன் செலுத்த வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிட்டும் போது யோசித்துச் செயலில் இறங்குவது இல்லை.
வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிவந்த சுமனசி புது ஊரில் தனக்கு தங்க இடம் கொடுத்த தோழிக்காக அவள் ஆசைப்பட்ட முன்னணி கதாநாயகனான உதயராஜின் ஆட்டோகிராப் வாங்க செல்லும் வேளையில் அவனிடமே அகப்பட்டுக் கொண்டு தங்க வேண்டிய இடத்தை இழந்து போகிறாள்.
போக்கிடம் இல்லாமல் தவிப்பவளை உதயராஜ் சென்னைக்கு அழைத்து வந்து தன் தாயிடமே வேலைக்கு சேர்த்துவிட்டது ஒரு மாதத்திற்குப் பிறகே சுமனசிக்குத் தெரியவருகிறது.
உதயராஜின் பணத்திற்காக அவனை வீழ்த்திவிட நினைக்கும் நடிகை ரதிமாலாவின் திட்டத்தில் அவன் மாட்டாமல் போவது அவளுக்கு மேலும் வன்மத்தை கிளப்பிவிட்டதால் தன்னை ஏமாற்றிவிட்டான் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறாள்.
ரதிமாலா ஒப்படைத்த சாட்சியை முறியடிக்க அந்த நேரத்தில் உதயராஜுடன் இருந்த சுமனசியால் தான் முடியும் என்ற இக்கட்டில் தன் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று அவள் எடுத்த முடிவு அவனை அவளிடம் சேர்ப்பிக்கிறது.